Tuesday, June 19, 2012

நாக்கு கடியை சரிசெய்ய...


நாக்கு கடியை சரிசெய்ய...
1. நாக்கு கடி என்பது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது அல்ல. மற்ற உறுப்புகளில் ஏற்படும் பாதிப்பை பார்த்தால், இது விரைவில் குணமடைந்துவிடும். எப்படியென்றால், வாயில் சுரக்கும் எச்சிலே எளிதாக அதனை விரைவில் குணப்படுத்திவிடும்.
2. எப்போது நாக்கை கடித்துக் கொண்டு, அதனால் புண் ஏற்பட்டு, இரத்தம் வருகிறதோ, அப்போது அந்த இடத்தில் உடனே ஐஸ் வைத்தால், வலி நின்று, இரத்தம் வருதலும் நின்றுவிடும்.
3. வாயை உப்புத் தண்ணீரால் கொப்பளிக்கலாம். அப்படி வெட்டுபட்ட இடத்தில் உப்பை வைத்தால் சிறிது நேரம் எரியும். ஆனால் அது ஒரு சிறந்த மருந்து. ஏனெனில் உப்பில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் இருப்பதால், அது பாக்டீரியா மற்றும் பிற தொற்றுநோய்கள் வராமலும் தடுக்கும்.
4. உணவு உண்டப்பின், ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட்டால், தேனில் உள்ள மருத்துவ குணம் நாக்கு கடியை சரிசெய்யும்.
5. தண்ணீர் குடிக்கலாம். நாக்கு கடி மற்றும் வாய்ப்புண் ஆகியவை இருப்பவர்கள் குளிர்ந்த தண்ணீர் குடித்தால் அது சரியாகிவிடும்.
6. மேலும் நாக்கை கடித்துக் கொண்டு, அதனால் புண் ஏற்பட்டவர்கள் காரமான உணவுகளை உண்ண வேண்டாம். ஏனெனில் காரமான உணவு புண்ணை மேலும் பெரிதாக்குமே தவிர, விரைவில் குணமடைவது கூட தடைபடும்.
இந்த வீட்டு மருந்துகள் எல்லாம் நாக்குப் புண்ணை சரிசெய்யும். கடியானது சற்று ஆழமாக இருந்தால், அது சரியாக சற்று நாட்கள் ஆகும். பொதுவாக அத்தகைய நாக்கு கடி ஒன்று அல்லது இரண்டு வாரத்தில் சரியாகும் என்றும் கூறுகின்றனர் மருத்துவர்கள்.

No comments:

Post a Comment