| வயிற்றில் ஆண் குழந்தையா? இந்த உணவுகளை ருசிக்க தூண்டும் |
| கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு சில உணவுகளை சாப்பிட வேண்டும் என தோன்றும்.
இனிப்பு, புளிப்பு, உப்பு என விதவிதமான உணவுகளை சாப்பிடுவார்கள்.
கர்ப்பிணிகள் தாங்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளை வைத்தே, வயிற்றில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பது குறித்து அறிந்து கொள்ள முடியும்.
இதற்கு அறிவியல்பூர்வ ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றாலும், சில சமயங்களில் இந்த கணிப்பு உண்மையாகிறது.
அப்படி ஆண் குழந்தை இருந்தால் சாப்பிட தோன்றும் உணவுகள் இதோ,
கர்ப்பிணிகளுக்கு இனிப்பான உணவுகளைப் பார்த்து அதிக ஆசை எழுந்தால், வயிற்றில் பெண் குழந்தை என்றும், அதுவே உப்புமிக்க உணவுகளின் மீது ஆசை அதிகம் இருந்தால், இது ஆண் குழந்தை என்றும் கருதப்படுகிறது.
காரமான உணவுகளை உட்கொள்ளாமல் இருந்துவந்த பெண்களுக்கு, கர்ப்பகாலத்தில் திடீரென காரமான உணவுகளின் மேல் ஆசை ஏற்படுதல்.
அசைவ உணவுகளின் மேல் நாட்டம் அதிகரித்தல்.
ஆண் குழந்தையை சுமந்துகொண்டிருக்கும் கர்ப்பிணிகளுக்கு ஊறுகாயை பார்த்தால் நாவில் எச்சில் ஊறும், ஏனெனில் உப்பு, காரம், புளிப்பு போன்றவை அதில் அடங்கியுள்ளன.
பொதுவாக, ஆரஞ்சு பழங்களை ஏராளமான கர்ப்பிணிகள் விரும்பி சாப்பிடுவதாக கூறப்படுகிறது.
பெண் கருத்திரிப்பதற்கு மூன்று மாதங்கள் முன்பிருந்தே முட்டைக் கேஸ், பீன்ஸ், கேரட், காலிபிளவர், வெங்காயம், உப்பு இவற்றை உணவில் அதிக அளவு சேர்த்துக் கொள்ளும் போது பொட்டாசியம், சோடியம் போன்ற சத்துக்கள் அதிகரித்து ஆண் குழந்தை பிறக்கும்.
இதே சமயத்தில் கால்சியம், மக்னீசியம் உணவில் அதிகரிக்கும் போது பெண் குழந்தை பிறக்கிறது.
இவ்வாறு நமது உடலில் எந்த சத்து அதிகரிக்கிறதோ, அவ்வாறே குழந்தை பிறக்கிறது. என்பதைப் புரிந்து கொண்டு உணவு உட்கொள்ள வேண்டும்.
|
Thursday, April 30, 2015
வயிற்றில் ஆண் குழந்தையா? இந்த உணவுகளை ருசிக்க தூண்டும்
Monday, April 27, 2015
பாலுடன் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
| பாலுடன் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் |
இதில் உள்ள புரோபயோடிக் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
கோடை காலங்களில் வெயிலின் தாக்கத்தால் உடலின் ஆற்றல் குறையும், இதனால் பாலுடன் தேன் கலந்து குடித்தால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கும்.
எலும்புகளின் ஆரோக்கியத்தை பேணி காக்க உதவும், பாலுடன் தேன் கலந்து குடித்ததால், எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.
இரவு தூங்கும் போது குடித்தால் நிம்மதியான தூக்கம் வரும்.
மலச்சிக்கலால் அவதிப்பட்டு வருபவர்கள், வெதுவெதுப்பான பாலில் தேனை கலந்து, அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் குணமடையும்.
சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள் இதனை குடித்தால், அதில் உள்ள ஆன்டி பாக்டீரியல், உடலில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து சளித்தொல்லையில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
மேலும் இவற்றில் உள்ள கனிமச்சத்துக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் இனப்பெருக்க மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
உடல் உள்ள கொழுப்புகளை கரைத்து எடையை குறைக்க உதவுகிறது. நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் உணவு உட்கொண்ட பின்னர், பாலுடன் தேன் கலந்து குடித்தால் நெஞ்செரிச்சல் குணமாகும்.
|
Sunday, April 12, 2015
அரை அவியல் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்
| அரை அவியல் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் |
பொறித்த முட்டையை காட்டிலும் அரை வேக்காடு (ஹாஃப் பாயில்) முட்டையை உட்கொள்ளுதலே நன்மையை அளிக்கும்.
அதற்கு காரணம் அதிலுள்ள ரிபோஃப்ளேவின் மற்றும் செலீனியம்.
அதிக அளவிலான புரதத்தை கொண்டுள்ள முட்டை கலோரிகளை அதிகரிப்பதில்லை. பொரித்த முட்டை போன்ற இதர முட்டை வகைகளுடன் ஒப்பிடுகையில் அரை வேக்காடு முட்டையில் கலோரிகளின் அளவு குறைவே.
அரை வேக்காடு முட்டையில் 78 கலோரிகளும், 5.3 கிராம் கொழுப்புகளும் மட்டுமே அடங்கியுள்ளது.
அரை வேக்காடு முட்டையில் கார்போஹைட்ரேட்ஸ், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் அடங்கியுள்ளது.
வலுவற்ற நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ள கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.
வலுவான உடல்நலத்தை கொண்டுள்ளவர்களுக்கு தான் அரை வேக்காடு முட்டை ஆரோக்கியத்தை அளிக்கும்.
நாம், பொரித்த முட்டை சாப்பிடுவதை விட அரைவேக்காடு முட்டையை சாப்பிட்டால் ஆரோக்கியம் கிடைக்கும்.
|
நுரையீரல் பாதிப்பை குறைக்கும் பீன்ஸ்
| நுரையீரல் பாதிப்பை குறைக்கும் பீன்ஸ் |
| பீன்ஸ் கலந்த உணவை தினமும் சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் கணிசமாக குறையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புகைபிடித்தல், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வந்த நுரையீரல், காற்று மாசுபடுதலாலும் தற்போது அதிகம் பாதிக்கப்படுகிறது.
இதனால் நுரையீரல் புற்றுநோய், நெஞ்சுச் சளி, மூச்சுத்திணறல் மற்றும் பல்வேறு சுவாசக் கோளாறுகள் மனிதர்களைத் தாக்குகின்றன.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கார்ட்டின் தொழிநுட்ப பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஒரு ஆய்வை ஜப்பானில் உள்ள ஒரு மருத்துவமனை ஆய்வுக்கூடத்தில் மேற்கொண்டனர்.
உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய காய்கறிகள் குறித்த இந்த ஆய்வின் முடிவில், நுரையீரல் பாதிப்பை பீன்ஸ் கணிசமாகக் குறைத்தது தெரியவந்தது.
மேலும், நோய்ப் பாதிப்பு இருப்பவர்கள் பீன்சை சாப்பிடும் போது நல்ல நிவாரணம் கிடைப்பதையும் ஆய்வாளர்கள் உறுதிசெய்தனர்.
பச்சை பீன்சில் வைட்டமின் பி 6, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் மாங்கனீஸ் சத்துகள் அதிகம் உள்ளன. இது தவிர புரோட்டீன் அதிகம் உள்ளது.
அதனால் பீன்சை முழுவதுமாக வேகவைப்பதைக் காட்டிலும், அரைவேக்காட்டுடன் சாப்பிடுவது சிறந்தது.
பீன்சை வேகவைக்கும்போது அந்தத் தண்ணீரை கீழே ஊற்றாமல் சாம்பார் அல்லது சூப் தயாரிக்கப் பயன்படுத்துவதன் மூலம் பீன்சின் முழுச் சத்துகளையும் பெறமுடியும்.
தினமும் சுமார் 50 கிராம் பீன்சை உட்கொண்டால் நுரையீரல் தொடர்பான நோய்த் தாக்குதலில் இருந்து 90 சதவீதம் வரை மனிதனுக்கு நோய் ஏற்படாது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
|
Tuesday, April 7, 2015
சப்போட்டாவின் சத்தான நன்மைகள்
| சப்போட்டாவின் சத்தான நன்மைகள் |
சப்போட்டாவின் மற்றொரு பெயர் சிக்கு. ஆங்கிலத்தில் ‘சப்போட்டா’ (sapota) என்றும் ‘சப் போடில்லா’ (sapodilla) எனவும் கூறப்படுகிறது.
சப்போட்டேசியே (sapotceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இதன் தாவரவியல் பெயர் ‘அக்ரஸ் சப்போட்டா’ (Achars sapota). இதன் தூய தமிழ்ப்பெயர், ‘சீமை இலுப்பை’. இலுப்பைப் பழத்தைப் போல் உருவமுடையதால் இப்பெயர் வந்தது.
சப்போட்டாவில் உள்ள குளுக்கோஸ் நம் உடலுக்கு அதிக ஆற்றலை வழங்குகிறது.மேலும் இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துக் காணப்படுகிறது.
சப்போட்டாவின் மகத்துவங்கள்
சப்போட்டாவில் அதிக அளவு வைட்டமின் ஏ- இருப்பதால் வயதான காலத்திலும் கூட, பார்வையை மேம்படுத்த உதவுகிறது.
சப்போட்டாவில் குளுக்கோஸ் நிறைந்திருப்பதால், அது உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கிறது.
இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துகள் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது.
சப்போட்டாவில் உள்ள கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ்(Phosperous) போன்றவைகள் எலும்புகளை வலுவாக்குவதுடன், சிறுநீரக கற்களை வெளியேற்றவும் உதவுகிறது.
இப்பழத்திலிருக்கும் பொட்டாசியம்(Pottasium), இரும்புச்சத்து, போலேட்(Bolet), நியாசின்(Niyasen) மற்றும் பேண்டோதெனிக்(Fontothenic) அமிலம் போன்றவைகள் செரிமான அமைப்பு முறையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.
சப்போட்டா விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய்யை கூந்தலுக்கு பயன்படுத்துவதால், தலைமுடி ஈரப்பதமாகவும் மற்றும் மென்மையாகவும் இருக்கும்.
இதில் கார்ப்போஹைட்ரேட்(Carbohydrate) மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் கர்ப்பிணிகளுக்கு உடல் பலவீனம், குமட்டல் மற்றும் மயக்கம் உள்ளிட்டவை குறைக்கிறது.
மேலும் இதில் இருக்கும் பாலிஃபீனாலிக் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள்(polyphenolic antioxidants), வைரஸ்(Virus) மற்றும் பக்டீரியாக்களை(Bacteria) எதிர்க்க வல்லது.
|
Subscribe to:
Comments (Atom)