| தினமும் வெதுவெதுப்பான பாலில் கொஞ்சம் மஞ்சள் சேர்த்து குடியுங்கள்! |
மஞ்சளில் உள்ள சத்துக்கள்
மஞ்சள் தூளில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-கார்சினோஜெனிக் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மைகள் தான்
மஞ்சளில் மாங்கனீசு, பொட்டாசியம், இரும்புச்சத்து, விட்டமின் பி6, மக்னீசியம், வைட்டமின் சி, நார்ச்சத்து போன்றவையும் மஞ்சளில் உள்ளது.
பாலில் உள்ள சத்துக்கள்
பாலில் பாஸ்பரஸ், புரோட்டீன், கார்போஹைட்ரேட், கால்சியம், நல்ல கொழுப்பு, ரிபோஃப்ளேவின், விட்டமின் டி மற்றும் விட்டமின் பி12 உள்ளது.
இந்த இரண்டினையும் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.
மருத்துவ பயன்கள்
1. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால், சளி, இருமல் மற்றும் இதர சுவாசப் பிரச்சனைகளுக்கு காரணமான பாக்டீரியாக்கள் அல்லது வைரஸ்கள் அழிக்கப்படும்.
2. மஞ்சளில் உள்ள மருத்துவ குணத்தால், இரத்தம் சுத்தம் செய்யப்பட்டு, உடலின் அனைத்து பாகங்களுக்கும் சீராக ஓடும். மேலும் இது மூட்டு வலிகளையும் சரிசெய்யும்.
3. பாலில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு மிகவும் நல்லது மற்றும் மஞ்சள் எலும்புகளை வலிமையாக்கும். எனவே உங்கள் எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இருக்க தினமும் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடியுங்கள்.
4. தினமும் இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்தால், நல்ல நிம்மதியான மற்றும் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.
5. மஞ்சளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர சத்துக்கள், சிறந்த வலி நிவாரணியாக செயல்படும். எனவே தலை வலி அதிகமாக இருக்கும் போது, பாலுடன் மஞ்சள் தூள் கலந்து குடித்து வர உடனடி நிவாரணம் கிடைக்கும்.
6. பெண்கள் தினமும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்து வர, மாதவிடாய் காலத்தில் வரும் வயிற்று வலி மற்றும் வயிற்றுப் பிடிப்புக்கள் குறையும்.
7. மஞ்சளில் உள்ள சேர்மங்கள், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை உடைத்து, உடல் எடை குறைய உதவும். அதற்கு தினமும் ஒரு டம்ளர் பாலில் மஞ்சள் தூள் கலந்து குடியுங்கள்.
8. முக்கியமாக பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்தால், ப்ரீ ராடிக்கல்களால் (Radicles) சரும செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்து, சருமத்தின் அழகையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
|
Monday, December 14, 2015
தினமும் வெதுவெதுப்பான பாலில் கொஞ்சம் மஞ்சள் சேர்த்து குடியுங்கள்!
Friday, November 27, 2015
இரத்தத்தைச் சுத்திகரிக்கும் அற்புத உணவு காளான்!
| இரத்தத்தைச் சுத்திகரிக்கும் அற்புத உணவு காளான்! |
| காளான் இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.
இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.
100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.
மருத்துவ பயன்கள்
காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.
இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது.
இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும்.
வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும்.
இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது.
இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது. இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான்.
மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றை குணப்படுத்துகிறது.
தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.
|
Friday, November 6, 2015
தேன் மற்றும் இலவங்கப்பட்டை கலவை
மருத்துவர்களே ஆச்சரியப்படும் தேன் மற்றும் இலவங்கப்பட்டை கலவையின் பயன்கள்!
எப்போதும் மருத்துவர்கள் தான் புதிய மருந்துகளை கண்டுபிடித்து நோயாளிகளை ஆச்சரியப் படுத்துவார்கள். ஆனால், இந்த முறை தேன் மற்றும் இலவங்கப்பட்டை இவற்றின் கலவையால் ஏற்படும் பயன்களை கண்டு மருத்துவர்களே ஆச்சரியத்தில் மூழ்கிப் போய் இருக்கிறார்கள்.
தேன் மற்றும் இலவங்கப்பட்டையில் இருக்கும் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும், இவை பல உடல்நலக் கோளாறுகளுக்கு சிறந்த பயனளிக்கிறது என்றும் மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஆயிரம் வருடங்களாக எகிப்து பகுதிகளில் இவற்றை அருமருந்தாக பயன்படுத்தி வந்துள்ளனர். மற்றும் நமது இந்திய பாரம்பரியத்தில் இவற்றை நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட வாழ்நாளுடன் இருப்பதற்கு பயன்படுத்தி வந்துள்ளனர். இதை இப்போது மாடர்ன் மருத்துவமும் ஒப்புக்கொண்டுள்ளது....
ஒரு ஸ்பூன் தேன் மற்றும் கால் ஸ்பூன் இலவங்கப்பட்டை சேர்த்து உட்கொண்டு வந்தால் சளி, கபம், இருமல் போன்றவற்றுக்கு தீர்வுக் காண முடியும்.
இரண்டு ஸ்பூன் தேனுடன், மூன்று ஸ்பூன் இலவங்கப்பட்டை சேர்த்து தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு இரண்டு மணி நேரத்தில் 10% குறையுமாம்.
உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சரி செய்ய தினமும் இந்த தேன் மற்றும் இலவங்கப்பட்டை கலவையை உட்கொண்டு வாருங்கள் . இது இயற்கையாகவே நச்சுக்கள் மற்றும் பாக்டீரியாக்களிடம் இருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது.Thursday, November 5, 2015
கால் பாதங்களால் காய்ச்சலை குணப்படுத்தலாம்!
| கால் பாதங்களால் காய்ச்சலை குணப்படுத்தலாம்! |
மழைக்காலம் என்றாலே கூடவே காய்ச்சலும் வந்து விடும். இதனால் தொடர் இருமல், மூக்கு சிவந்துபோய் மூக்கு ஒழுகும் கூடவே உடல் வெப்பமும் அதிகரித்து காணப்படும்.
இப்போது கடைகளில் காய்ச்சல் எதிர்ப்பு மருந்துகள் அதிக அளவில் மிக எளிதாக கிடைக்கின்றன.
கடைகளில் பரவலாக கிடைக்கும் மருந்துகளை பயன்படுத்துவதற்கு முன்னர் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் சிகிச்சை முறைகளை ஒரு முறை நாம் சோதனை செய்வதில் தவறில்லை.
வெங்காயமும் கால் பாதங்களும் காய்ச்சலையும் அது தொடர்பான நோய்களையும் கட்டுப்படுத்தும் என கூறுவது வேடிக்கையாக இருக்கலாம்.
கால் பாதங்களுக்கும் மூளைக்கும் நேரடி தொடர்பு உள்ளது. பாதங்களில் இருந்து பெறப்படும் செய்திகளை மூளை உள்வாங்கிக்கொண்டு உடனுக்குடன் நமது உடலை அது சரிசெய்து கொள்கிறது.
கால் பாதங்களுக்கடியில் வெங்காயம் வைத்து கட்டு போடுவது என்பது காய்ச்சல் மற்றும் அது தொடர்பான நோய்களை கட்டுப்படுத்துவதில் உடனடி நிவாரணம் தரக்கூடியதாகும்.
இதுபோன்று கட்டுப்போடுவது 6 மாதங்களுக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு உடனடியான நிவாரணம் தரக்கூடியதாகும்.
|
காராமணியில் அடங்கியுள்ள சத்துக்கள் பற்றி தெரியுமா?
| காராமணியில் அடங்கியுள்ள சத்துக்கள் பற்றி தெரியுமா? |
இவற்றை காலை, மாலை, இரவு என ஆகிய மூன்று நேரங்களிலும் எடுத்துக்கொள்வதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
அடங்கியுள்ள சத்துக்கள்
பி காம்ப்ளக்ஸ், கனிமச்சத்துக்கள், விட்டமின் கே, விட்டமின் சி மாவுச்சத்து, புரதச்சத்து, மக்னீசியம், தாமிரம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
மருத்துவ பயன்கள்
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்.
வயிற்றுப்புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் உண்டு.
வளரும் குழந்தைகளுக்கு மிகவு உகந்தது.
உணவைக் குறைத்து சக்தியையும் இழக்காமல் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் காராமணியை காலை மற்றும் மதியம் எடுத்துகொள்ள வேண்டும்.
ஏனெனில் 1/2 கப் அளவு காரமணியில் 1 கிராம் கொழுப்பு உள்ளது.
காராமணியில் உள்ள துத்தநாக உப்பு, லெப்டின் என்ற இயக்குநீரை தாராளமாகச் சுரக்க வைக்கும். இந்த இயக்குநீர் இரத்தத்தில் நிறைய இருக்கும்போது மூளைக்கு `சாப்பிட்டது போதும்' என்ற சமிக்ஞையைத் தந்துவிடும்.
இதில் நிறைந்துள்ள விட்டமின் கே, மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும். குறிப்பாக இது எலும்புகளை வலுவோடு வைப்பதற்கு பெரிதும் உதவியாக உள்ளது.
Anti-oxidants அதிகமாக நிறைந்துள்ளதால் உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழித்துவிடும்.
சிறுநீரக பிரச்சனை மற்றும் வயிற்று உபாதைகள் உள்ளவர்கள் இதனை உட்கொள்ளலாம்.
flavonoids நிறைந்துள்ளதால் இதயம் சம்பந்தமான நோய்களை குணமாக்கும்.
பக்கவாதம்(stroke), உயர் இரத்த அழுத்தம்(hypertension), ஆஸ்டியோபோரோசிஸ்( osteoporosis) போன்ற நோய்களுக்கு தீர்வு அளிக்கும்.
முகச்சுருங்களை போக்கி தோல்களை மென்மையாக வைத்திருக்க உதவும், மேலும் முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.
காராமணி சாதம்
வானலியில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, அதோடு பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின்பு கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், தக்காளி சேர்த்து மசிந்து வரும் வரை வதக்கவும்.
2. குக்கரில் அரிசி, காராமணி, புளி தண்ணீர் ஆகியவற்றை எடுத்து வைக்கவும்.
3. தக்காளி நன்கு மசிந்தவுடன், குழம்பு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறி, குக்கரில் சேர்க்கவும்.
4. அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கர் மூடி போட்டு மூடி 3 விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும்.
இப்பொழுது சுவையான காராமணி சாதம் தயார்.
பயன்கள்
நார்ச்சத்து இருப்பதால், இது இருதய நோய் ஏற்படுவதை தடுக்கும். மேலும் இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் நிறைந்துள்ளது.
இதனால் தசைச் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்.
|
Friday, October 30, 2015
வெந்நீர் குடிப்பது ஆரோக்கியமா? எப்போது குடிக்க வேண்டும்
| வெந்நீர் குடிப்பது ஆரோக்கியமா? எப்போது குடிக்க வேண்டும் |
உடல் எடையைக் குறைக்க நினைக்கும் சிலர் காலையில் மட்டும் வெந்நீர் குடிப்பது உண்டு. ‘எடையைக் குறைக்க மட்டும் அல்ல, வெந்நீர் அருந்துவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படவும் உதவுகிறது.
எந்த நேரத்தில் வெந்நீர் குடிக்கலாம்?
அதிகாலையில் அருந்துவது மிகவும் நல்லது. அதிகாலையில், வெந்நீரை ஆற்றும்போது, காற்றில் கலந்திருக்கும் ஓசோன் வாயு, வெந்நீருடன் கலக்கும். ஓசோன் என்பது ஆக்சிஜன்.
அது நம் உடலின் சக்தியைத் தூண்டிவிடும். சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்தால் செரிமானத்தைத் தூண்டும்.
மருத்துவ பயன்கள்
தினமும் காலை இரண்டு டம்ளர் வெந்நீர் குடிப்பதால், பழைய என்ஸைம்கள் வெளியேற்றப்பட்டு, புது அமிலங்கள் உற்பத்தியாகின்றன.
அன்றைய தினம் முழுக்க செரிமான மண்டலம் திறனுடன் வேலை செய்ய இது உதவுகிறது.
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு வெந்நீர் ஒரு அருமருந்து. மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் அதிகமான கழிவுப் பொருட்கள், நம் குடலில் தங்குவதுதான்.
இதனால், வயிற்று வலி, உப்புசம் முதலானவை உண்டாகி தொந்தரவு செய்யும். வெந்நீர் அருந்தும்போது, அது உணவுப் பொருட்களை எளிதில் செரிமானம் செய்து, வெளியேற்ற உதவுகிறது.
வயிற்றைச் சுத்தப்படுத்துவதில், வெந்நீருக்கு இணை எதுவும் இல்லை. வெந்நீர் உடலுக்குள் செல்லும்போது, அதிகமாக வியர்க்கும், உடலின் வெப்பநிலை அதிகரிக்கும்.
இப்படி அதிகரித்த வெப்பநிலையைக் குறைத்து, நம் உடல் வெப்பத்தை சமநிலையில் வைத்திருக்கத்தான் வியர்வை உற்பத்தியாகிறது.
இதனால், நம் உடலின் செல்களில் உள்ள நீர், உப்பு முதலான கழிவுகள் வெளியேறுகின்றன.
வெந்நீர் அருந்தும்போது, ரத்தக் குழாய்கள் விரிவுபடுத்தப்படும். இதனால், உடல் முழுக்க நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும். செல்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜன் சீராகக் கிடைக்கும்.
போதுமான அளவு வெந்நீர் அருந்திவந்தால் சருமம் பொலிவடையும்.
இருமல் மற்றும் சளி ஏற்பட்டால், நம் தொண்டையின் டான்சிலில்(Toncil) அதிக வலி ஏற்படும். அப்போது, வெந்நீர் குடிப்பது தொண்டை வலியைக் குறைக்கும்.
நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, ரத்தக் குழாய்கள் சற்று விரிவடைந்து, உடலின் ரத்த ஓட்டமும் மேம்படும்.
|
சோயாபீன்ஸில் இவ்வளவு நன்மைகளா?
| சோயாபீன்ஸில் இவ்வளவு நன்மைகளா? |
எனவே இது பெண்களுக்கு சோயாபீன்ஸ் சிறந்த உணவாகும்.
சத்துக்கள்
தயாமின் (Thiamin), நியாசின் (Niacin), போலிக் ஆசிட், ரைபோபிளேவின் (Riboflavin) 100 கிராம் சோயாவில் 43 கிராம் புரோட்டின் உள்ளது.
100 கிராமில் 20 கிராம் கொழுப்பு உள்ளது. 100 கிராம் சோயாவில் 30 கிராம் கார்போஹைட்ரேட் (Carbohydrate) உள்ளது, மக்னீஷியம் (magnesium) 280 மி.கி, கால்சியம் (calcium) 277 மி.கி., பாஸ்பரஸ் 704 மி.கி ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது.
மேலும் அனைத்துவகை விட்டமின்களும் உள்ளது.
மருத்துவ பயன்கள்
1. சோயாவில் இருக்கிற தாவர ஹார்மோன் எலும்புகளின் தேய்மானத்தையும், உதிர்வையும் தடுக்கும் சக்தி கொண்டது.
2. மெனோபாஸ் (Menopause) பிரச்னைகளைத் தடுக்கும் ஆற்றல் சோயாவுக்கு உண்டு. இதில் இருக்கிற ஐசோ பிளேவினாஸ் பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் போல செயல்படும் சக்தி கொண்டது.
3. இதயத்தின் சக்தியைக் கூட்டுவதில் சோயா அபாரமாகச் செயல்படும். இரத்தக் குழாய்களின் இளகுத் தன்மையை அதிகரித்து, கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இரத்தக் குழாய்களுக்குள் அடைப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
4. இயற்கையாகவே இருக்கிற ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட், விட்டமின் "ஈ" லெசித்தின் போன்றவை கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து இருதயப் பாதுகாப்பில் ஈடுபடுகின்றன.
5. சோயா எண்ணெய்யில் இயற்கையான ஆன்ட்டி ஆக்ஸிடென்டுகள் நிறைந்து இருப்பது இரத்தக்குழாய்களுக்கும், இருதயத்திற்கும் நன்மை செய்யும்.
6, மார்பகம் சிறிதாக இருக்கும் பெண்கள் சோயாபீன்ஸ் எடுத்துக்கொள்வதன் மூலம் மார்பகம் பெரிதாகும், ஏனெனில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவை அதிகரிக்கும் தன்னை சோயாபீன்ஸ்க்கு உள்ளது.
குறிப்பு
வயிற்றில் ஜீரணத்திற்கு உதவும் டிரிப்சின்(Tripsin) என்கிற என்ஸைமின்(Enzyme) வேலையைத் தடுப்பதில் சோயா ஈடுபடுகிறது. ஆக இதைத் தடுக்க சோயாவை நல்ல சூட்டில் வேக வைக்கவேண்டும்.
மேலும், உடலில் இரும்புச்சத்து உற்பத்தியை சோயா தடுக்கிறது. இதனால் இரத்த சோகை உருவாகலாம். இதைத் தடுக்க விட்டமின் "சி" நிறைந்த பழங்களைச் சாப்பிடுங்கள்.
சோயா பீன்ஸ் குழம்பு
முதலில் ஊற வைத்துள்ள சோயாவை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின் வெங்காயத்தை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பின்பு சோயாவை சேர்த்து நன்கு கிளறி, துருவிய தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான சோயா பீன்ஸ் குழம்பு ரெடி!
பயன்கள்
சோயா பீன்ஸில் பாஸ்பரஸ், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, இது எளிதில் செரிமானமடையக்கூடிய உணவுப் பொருள்.
எனவே இந்த சோயா பீன்ஸ் கொண்டு எளிய முறையில் ஒரு குழம்பு செய்து சாப்பிட்டால், உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது.
|
Friday, October 16, 2015
சளி
பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எந்த மருந்துக்களை உபயோகித்தாலும் குணமாகாது.
*
மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதனில் தேவையான அளவு உப்பு இட்டு, நன்கு கொதிக்க வையுங்கள்.
*
கொதிக்க வைத்த இரண்டு கப் நீர், ஒரு கப் அளவு குறையும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு அந்த எலுமிச்சை பழத்தையும் பிழிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள்.
*
ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்து விட்டு தூங்குங்கள்.
*
நீங்கள் உறங்கிய பிறகு, உங்களுக்கு வியர்வையாக வியர்த்து உங்கள் உடம்பில் உள்ள சளி வெளியேறி விடும்.
*
பிறகு மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
*
பிறரும் பயன் பெற.... இந்த பதிவை படித்து விட்டு பகிர்ந்து கொள்ளுங்கள்.
*
மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதனில் தேவையான அளவு உப்பு இட்டு, நன்கு கொதிக்க வையுங்கள்.
*
கொதிக்க வைத்த இரண்டு கப் நீர், ஒரு கப் அளவு குறையும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு அந்த எலுமிச்சை பழத்தையும் பிழிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள்.
*
ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்து விட்டு தூங்குங்கள்.
*
நீங்கள் உறங்கிய பிறகு, உங்களுக்கு வியர்வையாக வியர்த்து உங்கள் உடம்பில் உள்ள சளி வெளியேறி விடும்.
*
பிறகு மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
*
பிறரும் பயன் பெற.... இந்த பதிவை படித்து விட்டு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Monday, October 5, 2015
சுண்டைக்காய் வற்றல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
| சுண்டைக்காய் வற்றல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! |
சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.
சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.
இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும், உடல் சோர்வை நீக்கும்.
தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும்.
ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.
பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி வெளியேறும்.
சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச் சளி, இரைப்பிருமல் (ஆஸ்துமா), காச நோய் குணமாகும்.
வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.
சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் 3 வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் குணமாகும்.
சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வர நீரிழிவு நோய் தணியும்.
|
Monday, September 28, 2015
காளான் ஏற்படுத்தும் அதிரடி மாற்றம்! குண்டானவர்களுக்கு நற்செய்தி!
| காளான் ஏற்படுத்தும் அதிரடி மாற்றம்! குண்டானவர்களுக்கு நற்செய்தி! |
சமீபத்தில் காளானை சாப்பிட்டால், குறிப்பாக அதன் திரவச்சாற்றினை குடித்தால், தொப்பையைக் குறைக்க முடியும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் உடல் பருமன் அதிகமாவதைத் தடுக்கும் திறன் உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சியானது எலியின் மீது நடத்தப்பட்டு, அதனால் சாதகமான முடிவு வந்ததுள்ளதாம்.
இந்த ஆராய்ச்சிக்கு எலியைப் பயன்படுத்தினர். இந்த ஆராய்ச்சியில் எலிக்கு கொழுப்புமிக்க உணவுகளைக் கொடுத்து வந்ததோடு, காளானும் கொடுக்கப்பட்டது.
அப்படி கொடுத்ததில், காளான் எலியின் குடலில் உள்ள கெட்ட கிருமிகளை அழிப்பது தெரிய வந்ததோடு, எலியும் குண்டாகாமல் இருந்தது.
இதன்மூலம் காளானில் உள்ள சத்துக்களானது உடலில் கொழுப்புக்கள் தங்குவதைத் தடுப்பதோடு, இதர பிரச்சனைகளான இன்சுலின் பிரச்சனை, கல்லீரல் நோய்கள், புற்றுநோய், தூக்கமின்மை, டைப்-2 நீரிழிவு போன்றவற்றையும் குறைப்பதாக தெரிய வந்தது.
உடல் பருமன் உலகில் சுமார் 500 மில்லியன் மக்கள் தொப்பையாலும், 1.4 பில்லியன் மக்கள் உடல் பருமனாலும் கஷ்டப்படுகின்றனர்.
நிச்சயம் அத்தகையவர்களுக்கு இச்செய்தி சந்தோஷமான ஒன்றாக இருக்கும்.
எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போர், காளான் சாற்றினை குடிக்க முடியாவிட்டாலும், தங்களின் உணவில் காளானை அதிகம் சேர்த்தாலே போதும், எடை தானாக குறையும்.
|
Friday, September 25, 2015
தினமும் ரசத்தை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்
| தினமும் ரசத்தை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் |
உணவு வகைகளில் முக்கிய இடத்தை பிடிக்கும் ரசம், ஜீரண சக்தியை எளிதாக்குகிறது.
ரசங்களில் பல வகைகள் இருந்தாலும், பூண்டு, பெருங்காயம், மிளகு- சீரகம் உட்பட பல்வேறு பொருட்கள் சேர்வது ரசத்தில் தான்.
ஜீரணத்தை எளிதாக்கும் ரசம், பல வைட்டமின் குறைபாடுகளையும், தாது உப்புக் குறைபாடுகளையும் போக்கிவிடுகிறது.
அதுமட்டுமின்றி பசியின்மை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன சரியாகும்.
உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் பொறுத்தவரை 100 சதவிகிதம் பொருந்தும்.
ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக் குழாயில் உள்ள சளி, ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.
ரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்துகிறது.
வலிப்பு நோய் வராமல் தடுக்கிறது. மூளைக்கும் உடலுக்கும் அமைதியைக் கொடுக்கிறது. கொத்துமல்லிக்கீரை ரசத்தில் சேர்வதால், காய்ச்சல் தணிந்து சிறுநீர் நன்கு வெளியேறுகிறது.
வயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும், நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவை இருந்தால் அவற்றைக் குணப்படுத்தவும், ரசத்தில் சேரும் கறிவேப்பிலை உதவுகிறது.
|
Friday, August 14, 2015
கேரட்
| கொழுப்பை குறைத்து, ஆண்மையை அதிகரிக்கும் கேரட் |
| இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை.
இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
100 கிராம் கேரட்டில் உள்ள சத்துக்கள்
சக்தி - 41 கலோரிகள், கார்போஹைட்ரேட்ஸ் - 9 கிராம், சர்க்கரை - 5 கிராம், நார்சத்து - 3 கிராம்இ கொழுப்புச் சத்து - 0.2 கிராம், புரோட்டின் - 1 கிராம், வைட்டமின் A – 93% (835 மைக்ரோ கிராம்), பீட்டா கரோட்டின் – 77% (8285 மைக்ரோ கிராம்), வைட்டமின் B1 – 3% (0.04 மில்லி கிராம்), வைட்டமின் B2 – 3% (0.05 மில்லி கிராம்), வைட்டமின் B3 – 8% (1.2 மில்லி கிராம்), வைட்டமின் B6 – 8% (0.1 மில்லி கிராம்), வைட்டமின் B9 – 5% (9 மைக்ரோ கிராம்), வைட்டமின் C – 12% (7 மில்லி கிராம்), கால்சியம் – 3% (33 மில்லி கிராம்), இரும்புச் சத்து – 5% (0.66 மில்லி கிராம்), மாங்கனீஷ் – 5% (18 மில்லி கிராம்), பாஸ்பரஸ் – 5% (35 மில்லி கிராம்), பொட்டாசியம் – 5% (240 மில்லி கிராம்), சோடியம் 2.4 மில்லி கிராம்.
மருத்துவ குணங்கள்
1. வைட்டமின் “ஏ” சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது.
2.இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது.
3. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.
4. இவை இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கின்றது. மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.
5. கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.
6. பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
7. கேரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பக புற்று நோய் முற்றாமல் காத்துக் கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடாவில் புற்று நோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது.
8. கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்று நோயிலிருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
9. இந்தக் காய்களில் உள்ள வைட்டமின் “ஏ” விலிருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம், புற்று நோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடும்.
10. கேரட் சருமத்திற்கு பொலிவைத் தந்து சுருக்கத்தை நீக்குகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
கேரட் சாதம்
அரிசியை 900 மி.லி தண்ணீரில் அரை மணி நேரம் ஊர வைத்து குக்கரில் வைத்து 2-3 விசில் விட்டு சாதம் தயார் செய்து கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, உளுந்து, க.பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து விட்டு பிறகு மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். பின்னர் துருவிய கேரட்டை கொட்டி 50 மில்லி தண்ணீர் சேர்த்து கிளரி உப்பு சேர்த்து வேக விடவும்.
சிறிது நேரத்திற்கு பிறகு இறக்கி சாதத்துடன் சேர்த்து கிளரினால் சுவையான கேரட் சாதம் தயார்.
|
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
| வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! |
| நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்படுவதற்கு தண்ணீர் இன்றியமையாத ஒன்றாகும்.
மேலும் உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீரால் உருவானது. அதில் 70 சதவீத தண்ணீரால் தசைகளும், 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும் 83 சதவீத தண்ணீரால் இரத்தமும் உருவாகியுள்ளது.
எனவே தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் தண்ணீர் மிகவும் இன்றியமையாததாக உள்ளது.
இந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.
குடல் சுத்தமாகும்
அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையாக குடல் சுத்தமாகும். அதற்கு தண்ணீர் குடித்தவுடன், சிறிது நேரத்திலேயே மலம் கழிக்கக்கூடும்.
இப்படி தினமும் தவறாமல் மலம் கழித்தாலேயே, உடலில் உள்ள கழிவுகளானவை முற்றிலும் வெளியேறிவிடும்.
தண்ணீரானது உடலின் மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும்.
பசியைத் தூண்டும்
தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும்.
இரத்த செல்கள் உற்பத்தியாகும்
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் வளர்ச்சியானது அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்ஸிஜனை கொண்டிருப்பதால், உடலானது எனர்ஜியுடன் இருக்கும்.
தலைவலியை தடுக்கும்
பெரும்பாலானோருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதால் தலைவலி அடிக்கடி ஏற்படும். அத்தகையவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தாண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து தலைவலி குறையும்.
அல்சரைத் தடுக்கும்
காலையில் சாப்பிடாமல் அலுவலகத்திற்கு செல்பவர்கள், தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், அல்சர் ஏற்படாமல் தடுக்கலாம்.
எடையை குறைக்க உதவும்
எடையை குறைக்க நினைப்பவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதால் தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.
பொலிவான சருமத்தைக் கொடுக்கும்
குடலானது சுத்தமாக இல்லாவிட்டால், முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். இப்படி பருக்கள் வந்தால் சருமமானது அழகை இழந்துவிடும். எனவே தினமும் தண்ணீரைக் குடித்து வந்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, முகம் பருக்களின்றி பொலிவுடன் காணப்படும்.
|
| முகப்பு |
வெங்காயத்தாள்
| கொழுப்பால் உண்டாகும் இதயநோய்: இதோ குறைக்கும் வெங்காயத்தாள் |
சத்துக்கள்
வைட்டமின் C, வைட்டமின் B2, வைட்டமின் A, வைட்டமின் k மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது தவிர, இவைகளில் காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மங்கனீஸ் மற்றும் நார்ச்சத்துக்கள் மூலங்களாக உள்ளன.
மருத்துவ பயன்கள்
வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய கூழ்ம நிலை கார்போஹைட்ரேட், குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது.
வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அவைகள் உடலில் உள்ள கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கின்றது.
வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது.
வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அவைகள் உடலில் உள்ள கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கின்றது, இந்த காய்கறிகளில் உள்ள சல்பர் சேர்மங்கள், இரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் மற்றும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
வெங்காயத்தாள் இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவுகளை குறைக்க உதவுகிறது.
வெங்காயத்தாளில் உள்ள குரோமியம் சத்து நீரிழிவு நோய்க்கான சுகாதார நலன்களை வழங்குகிறது.
இது இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் குளுக்கோஸ் ஏற்புத் தன்மையை அதிகரிக்கிறது.
மேலும் இதில் உள்ள புரோப்பைல் டைசல்பேட்டானது, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
வெங்காயத்தாளில் உள்ள க்யூயர்சிடின், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஹிஸ்டமின் எதிர்ப்பு (திசுநீர் தேக்கி எதிர்ப்பு) போன்ற நன்மைகளை வழங்குகிறது.
இது கீல்வாதம் மற்றும் ஆஸ்துமா சிகிச்சைக்கு உதவும் வகையில் ஒரு நல்ல காய்கறியாக இருக்கிறது.
வெங்காயத்தாள் முட்டை பொரியல்
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து லேசாக வதக்கிவிட்டு, நறுக்கிய வெங்காயத்தாளைச் சேர்க்கவும்.
வெங்காயத்தாள் சில நிமிடங்களிலேயே வதங்கிவிடும். பிறகு முட்டையை உடைத்து ஊற்றி கிளறிவிடவும்.
முட்டை வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.
சுடுசாதத்தில் அப்படியே பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும். பொரியலாகவும், சப்பாத்திக்குத் தொட்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும்.
|
Monday, July 20, 2015
banana
Are you trying to lose a couple of pounds? Try eating bananas everyday! That’s what Yulia Tarabath decided to do.
Bananas are a great source of nutrients. They can help improve vision, increase weight loss, relivehypertension, and much more.
Yulia ate nothing but bananas for 12 straight days. She drank plenty of water, got ample amounts of rest, and exercised regularly. This type of diet is known as “mono-fruiting.” She claims she noticed in improvement in her overall emotional and physical health. The first thing she said she noticed was an improvement in her digestion and that she no longer experienced stomach pains. She also said she began to feel very relaxed and stress free. This means she was able to focus on her passions and creativity.
Other than just noticing health improvements, she also noticed that some of her previous aliments began to go away.
Thursday, June 11, 2015
உடலுக்கு அற்புத ஆரோக்கியங்களை அள்ளித்தரும் மிளகு
| உடலுக்கு அற்புத ஆரோக்கியங்களை அள்ளித்தரும் மிளகு |
இதில் மாங்கனீஸ், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து என்பன அடங்கி உள்ளது.
வலி மற்றும் காது சம்மந்தமான பிரச்சனைகள், பூச்சிக் கடி, குடல் இறக்கம், சுக்குவான் இருமல் ஆஸ்த்துமா போன்றவற்றிற்கு மிளகு இன்றி அமையாத ஒன்று.
நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மாறாட்டம் இவற்றிற்கு நல்ல மிளகு சிறந்த மருந்தாகும்.
மிளகின் நன்மைகள்
* மிளகுடன் பனை வெல்லம் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைப்பாரம்,தலைவலி போன்றவை குணமாகும்.
* மிளகை சுட்டு அந்தப் புகையை நுகர்ந்தால் தலைவலி குணமாகும் அது மட்டும் இன்றி மிளகை இடித்து தலையில் பற்றுப் போட்டாலும் தலைவலி விரைவில் குணமாகும்.
* தொண்டை வலி இருந்தால் கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்றால் தொண்டை வலி படிப்படியாக குணமாகும்.
* மிளகைப் ஒரு ஸ்பூன் எடுத்து அதை பொடி செய்து, சிறிதளவு உப்பு சேர்த்து சூடாக்கி சிறிதளவு நெய் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று உப்புசம், பசியின்மை போன்றவை உடனே குணமாகும்.
* சளி, ஜலதோஷம் அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியைச் சாப்பிடுவது நல்லது இரண்டு நாள்களிலேயே நல்ல மாற்றத்தை காணலாம்.
மிளகு அவல்
முதலில் மிளகை வாணலியில் போட்டு வறுத்துக் கொண்டு, பின்பு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
இதேபோன்று முந்திரியை நெய் சேர்த்து வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அவலை நீரில் போட்டு, மென்மையாகும் வரை ஊற வைக்க வேண்டும்.
இதன் பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து, நெய்யை ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அரைத்து வைத்துள்ள மிளகுத் தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் அவலை நன்கு கழுவி நீரை வடித்துவிட்டு, வாணலியில் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
இதில் துருவி வைத்துள்ள தேங்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், மிளகு அவல் உப்புமா ரெடி.
|
Monday, May 25, 2015
நினைவாற்றலை அதிகரிக்கும் மாதுளை
| நினைவாற்றலை அதிகரிக்கும் மாதுளை |
மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன.
* மாதுளம்பழச் சாறுடன் இஞ்சிச் சாறை சம அளவு எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால், நாள்பட்ட வறட்டு இருமல் ஓடிவிடும்.
* கல்கண்டு, பன்னீர், தேன், மாதுளம்பழச்சாறு நான்கையும் தலா ஒரு டம்ளர் எடுத்து, காய்ச்ச வேண்டும். இதை நெல்லிக்காய் அளவு எடுத்து, இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் படை, தேமல் போன்ற சரும நோய்கள் மறைந்து, சருமத்தை விட்டே விலகும்.
* மாதுளம்பழச் சாறையும் அருகம்புல் சாறையும் சம அளவு கலந்து குடித்து வந்தால், சூட்டினால் மூக்கிலிருந்து ரத்தம் வடிவது நிற்கும். இது உடலுக்குக் குளிர்ச்சியையும் தரும்.
* மாதுளை ஜுஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சினை நீங்கும். நினைவாற்றல் பெருகும். இது மட்டுமல்ல ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
|
Friday, May 22, 2015
பப்பாளி
| அலர்ஜியால் அவதியா? இந்த பழத்தை சாப்பிடுங்க |
கண்ணை கவரும் நிறத்தில் இருக்கும் பப்பாயா உடலுக்கு ஆரோக்கியமான நன்மைகளை வழங்குகிறது.
பப்பாளியில் அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ,சி மற்றும் ஈ இருக்கிறது.
இத்தகைய அதிகமான அளவு ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், அவை உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை கரைக்கின்றன.
பப்பாளியை சாப்பிட்டால் மலச்சிக்கல் இருந்தாலும் சரியாகிவிடும். பப்பாளியில் இருக்கும் நொதிப்பொருள் மற்றும் நார்ச்சத்துக்கள், குடல் இயக்கத்தை சரியாக இயக்குவதால் செரிமானம் எளிதில் நடைபெற்று மலச்சிக்கலும் குணமாகிறது.
பப்பாளியில் உடலில் ஏற்படும் அலர்ஜியை எதிர்த்து போராடும் பண்புகள் இருக்கின்றன. அதனால் தான் உடலில் எரிச்சல் அல்லது புண் இருந்தால் பப்பாளியை சாப்பிடுகின்றனர்.
மேலும் மூட்டுவலி அல்லது ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பப்பாளி ஒரு சிறந்த மருந்தாகும்.
பப்பாளியில் இருக்கும் பலவித பண்புகளோடு புற்றுநோயை குணப்படுத்தும் பொருளும் இருக்கிறது.
இந்த பழத்தில் இருக்கும் நார்ச்சத்து, புற்றுநோய் உண்டாக்கும் டாக்ஸின்களை(Toxin) உடலில் இருந்து முற்றிலும் வெளியேற்றி, வயிற்றில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கிறது.
மேலும், பப்பாளியில் இருக்கும் போலேட், வைட்டமின் சி, பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவையும் புற்றுநோய் உண்டாக்குவதை தடுக்கும் சத்துக்களாகும்.
பப்பாளி ஜீஸ்
பழுத்த பப்பாளி பழம் – 1, பால் - 1 கப், சீனி - 1 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி எல்லாவற்றையும் ஒன்றாக மிக்சியில் போட்டு அரைக்கவும்.
வெனிலா ஐஸ் க்ரிம் அல்லது ஸ்ட்ராபெர்ரி ஐஸ் க்ரீம் சேர்த்துக் கொள்ளலாம்.
பயன்கள்
வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் அடங்கியுள்ளதால் உடலுக்கு ஆரோக்கியத்தையும், உற்சாகத்தையும் வழங்குகிறது.
இதில் நியுட்ரியஸ் உள்ளதால் உடம்புக்கு நல்லது.
கொலஸ்ட்ரால் குறையும்.
அழகாக மாற ஆசையா
பழுத்த பப்பாளியை மிக்ஸியில் அரைத்து எலுமிச்சை பழ ஜீஸ் விட்டு கலந்து முகம் மற்றும் உடலில் தடவி ஊறியபின் தேய்த்துக் குளித்தால் பருக்கள், கரும்புள்ளிகள் மறையும்.
பப்பாளி தோலினை அரைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து கொண்டால் சருமம் மற்றும் முக சுருக்கத்திற்கு குட்பை சொல்லிவிடலாம். அவை வராமலும் தடுக்கவும் செய்யும்.
உங்களுடைய தோலை மென்மையாக வைத்திருக்க விரும்பினால், பப்பாளிப் பழத்தை எடுத்து மெல்லிய படலமாக உங்களுடைய தோலில் தடவி, சில நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் கழுவிக் கொள்ளுங்கள். |
Tuesday, May 19, 2015
பாசிப்பயறு
புரதம், கார்போஹைட்ரேட்டுடன், இரும்புச்சத்து, நார்ச்சத்து, தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.
கர்ப்ப காலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயறைக் கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும்.
சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்குச் சென்று சேரும்.
குழந்தைகளுக்கும், வளரும் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பயறு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
வயிற்றுக் கோளாறு இருப்பவர்கள் பாசிப்பயறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.
சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயறு ஊற வைத்த தண்ணீரை அருந்தக் கொடுக்கலாம்.
அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப் பயறு சிறந்த மருந்துப் பொருளாக விளங்குகிறது.
மணத்தக்காளி கீரையோடு பாசிப்பயறையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.
பாசிப்பயறை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும்.
வல்லாரைக் கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குளிக்கும்போது சோப்புக்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக் குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.
|
| எந்த நோய்க்கு என்ன சாப்பிடலாம்? சூப்பர் டிப்ஸ் |
மருந்துகள் சாப்பிட்டாலும், சில காய்கறிகளும், பழங்களும் நமக்கு மருந்தாக பயன்பட்டு சில நோய்களை விரட்டியடிக்கின்றன.
இதோ, நோய்களுக்கு சாப்பிட வேண்டிய உணவுகள்:
ரத்த சோகை: கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் மற்றும் தக்காளி.
ஆஸ்துமா: தேன், கேரட், அன்னாசிப்பழம்.
சர்க்கரை நோய்: முளைவிட்ட சிறுதானியங்கள் - பீன்ஸ், பாகற்காய், வெள்ளரி.
வயிற்றுப் புண்: கேரட் மற்றும் பூசணி சாப்பிடலாம்.
இதய நோய்: ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசிப்பழம், மாதுழம்பழம்.
கொழுப்பு குறைய; கொள்ளு மற்றும் கேரட் நிறைய சாப்பிடலாம்.
சளித் தொல்லை: துளசி இலைச்சாறு, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சைச்சாறு சாப்பிடலாம்.
இரத்த வாந்தி: வெங்காயத்தை உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும்.
மலச்சிக்கல்: நாள் தோறும் ஒரு பப்பாளித் துண்டு சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும்.
|
Monday, May 11, 2015
உடலில் உள்ள கழிவுகளை விரட்டும் உணவுகள்
| உடலில் உள்ள கழிவுகளை விரட்டும் உணவுகள் |
உடலில் சேரும் கழிவுகளை(நச்சுக்களை) வெளியேற்ற உணவில் இனிப்பை அதிகம் சேர்க்காமல் இருந்தாலே போதுமானது ஆகும்.
அவ்வாறு உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் உணவுகள்,
இஞ்சி
மருத்துவ குணமிக்க இஞ்சியைக் குடிக்கும் டீயில் சிறிது தட்டிப் போட்டு குடித்து வந்தால், அதில் உள்ள பொருள், உடலை சுத்தமாக்கும்.
முக்கியமாக இஞ்சியை சுடுநீரில் போட்டு காய்ச்சி, தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், கல்லீரலில் கழிவுகள் சேராமல் இருக்கும்.
பூண்டு
பூண்டு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை முற்றிலும் வெளியேற்றும்.
எனவே தினமும் உணவில் பூண்டு சேர்த்து வாருங்கள். மேலும் ஒரு பச்சை பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கொழுப்புகளும் கரையும்.
நட்ஸ் மற்றும் பருப்பு வகைகள்
நட்ஸ், பருப்பு வகைகள் போன்றவற்றில் நார்ச்சத்து வளமையாக நிறைந்துள்ளது. எனவே இந்த உணவுப் பொருட்களை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் கழிவுகள் சேராமல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் செயல்படும்.
க்ரீன் டீ
உடலை சுத்தப்படுத்த உதவும் உணவுப் பொருட்களில் க்ரீன் டீ தான் முதன்மையானது. ஏனெனில் க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்(antioxidant)அதிகம் உள்ளது.
இதனால் மூளையின் செயல்பாடு அதிகரிப்பது, கொழுப்புகள் கரைந்து உடல் குறைவது மற்றும் டைப்-2 நீரிழிவின் தாக்கமும் குறையும்.
இளநீர்
இளநீரில் கலோரிகள் மற்றும் சோடியம் குறைவாகவும், கொலஸ்ட்ரால் இல்லாமல் இருப்பதால், இதனை குடித்தால், உடல் சுத்தமாவதோடு, சருமமும் பொலிவு பெறும்.
மேலும் இளநீர் குடித்து வந்தால், செரிமானம் சீராக நடைபெறும்.
|
நோய்களை குணமாக்கும் தண்ணீர்: சூப்பர் டிப்ஸ்
| நோய்களை குணமாக்கும் தண்ணீர்: சூப்பர் டிப்ஸ் |
ஆனால், பணம் செலவழிக்காமல் நமக்கு ஆரோக்கியமான வாழ்க்கை தருவது தான் தண்ணீர்.
மனிதனின் உடல் உழைப்புக்கு ஏற்றவாறு நீர்ப்போக்கு ஏற்படுகிறது, ஒரு நாளைக்கு ஆண்கள் 3 லிட்டர் தண்ணீரும், பெண்கள் 2.2 லிட்டர் தண்ணீரும் அருந்த வேண்டும்.
தினமும், உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை எடுத்துக்கொள்வதன் மூலம், நம்மை எந்த நோய்களும் நெருங்கவிடாமல் தடுக்கலாம்.
1. காலையில் எழுந்ததும் பல் துலக்கும் முன்பே 160மிலி (4 டம்ளர்) தண்ணீர் அருந்துங்கள்.
2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிடங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.
3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.
4. காலை உணவுக்கு பின் 15 நிமிடங்களுக்கும், மதியம் மற்றும் இரவு உணவிற்கு பின் 2 மணி நேரங்களுக்கும் எதுவும் உட்கொள்ள வேண்டாம்.
5. முதியோர், நோயாளிகளால் ஆரம்பத்திலேயே 4 டம்ளர் நீரை அருந்த முடியாவிட்டால், கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.
எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும்:
*உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்.
*வாய்வுக்கோளாறுகள் - 10 நாட்கள்.
*சர்க்கரை வியாதி - 30 நாட்கள்.
*புற்றுநோய் - 180 நாட்கள்.
*காசநோய் - 90 நாட்கள்.
இதனை பின்பற்றி வாழ்ந்தால் நோய்கள் குணமாகும்.
|
Monday, May 4, 2015
பாலக்கீரை
| மூளை வளர்ச்சியை அளிக்கும் கீரை |
அனைத்துவகை கீரைகளிலும் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது, அதில் ஒன்றான பசலைக்கீரை மூளைவளர்ச்சிக்கு உதவுகிறது.
மருத்துவ பயன்கள்
பாலக்கீரை போல் உடலுக்கு நன்மை தரும் கீரை வேறெதுவும் இல்லை. இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் போன்றவை இதில் அடங்கியுள்ளன.
இந்த கீரையில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைவை தடுக்கிறது. மலச் சிக்கலை போக்கிறது.
இதில் மிக அதிகமாக உள்ள பச்சையம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது.
ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது.
ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது.
இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது, ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது.
பாலக்கீரை இலைச் சாற்றுடன், சீரகம் 5 கிராம்,பூண்டு இரண்டு பல் ஆகியவற்றை அரைத்து மூன்று சம பாகமாகப் பிரித்து வடிகட்டி மூன்று வேளை சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும்.
|
Thursday, April 30, 2015
வயிற்றில் ஆண் குழந்தையா? இந்த உணவுகளை ருசிக்க தூண்டும்
| வயிற்றில் ஆண் குழந்தையா? இந்த உணவுகளை ருசிக்க தூண்டும் |
| கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு சில உணவுகளை சாப்பிட வேண்டும் என தோன்றும்.
இனிப்பு, புளிப்பு, உப்பு என விதவிதமான உணவுகளை சாப்பிடுவார்கள்.
கர்ப்பிணிகள் தாங்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளை வைத்தே, வயிற்றில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பது குறித்து அறிந்து கொள்ள முடியும்.
இதற்கு அறிவியல்பூர்வ ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றாலும், சில சமயங்களில் இந்த கணிப்பு உண்மையாகிறது.
அப்படி ஆண் குழந்தை இருந்தால் சாப்பிட தோன்றும் உணவுகள் இதோ,
கர்ப்பிணிகளுக்கு இனிப்பான உணவுகளைப் பார்த்து அதிக ஆசை எழுந்தால், வயிற்றில் பெண் குழந்தை என்றும், அதுவே உப்புமிக்க உணவுகளின் மீது ஆசை அதிகம் இருந்தால், இது ஆண் குழந்தை என்றும் கருதப்படுகிறது.
காரமான உணவுகளை உட்கொள்ளாமல் இருந்துவந்த பெண்களுக்கு, கர்ப்பகாலத்தில் திடீரென காரமான உணவுகளின் மேல் ஆசை ஏற்படுதல்.
அசைவ உணவுகளின் மேல் நாட்டம் அதிகரித்தல்.
ஆண் குழந்தையை சுமந்துகொண்டிருக்கும் கர்ப்பிணிகளுக்கு ஊறுகாயை பார்த்தால் நாவில் எச்சில் ஊறும், ஏனெனில் உப்பு, காரம், புளிப்பு போன்றவை அதில் அடங்கியுள்ளன.
பொதுவாக, ஆரஞ்சு பழங்களை ஏராளமான கர்ப்பிணிகள் விரும்பி சாப்பிடுவதாக கூறப்படுகிறது.
பெண் கருத்திரிப்பதற்கு மூன்று மாதங்கள் முன்பிருந்தே முட்டைக் கேஸ், பீன்ஸ், கேரட், காலிபிளவர், வெங்காயம், உப்பு இவற்றை உணவில் அதிக அளவு சேர்த்துக் கொள்ளும் போது பொட்டாசியம், சோடியம் போன்ற சத்துக்கள் அதிகரித்து ஆண் குழந்தை பிறக்கும்.
இதே சமயத்தில் கால்சியம், மக்னீசியம் உணவில் அதிகரிக்கும் போது பெண் குழந்தை பிறக்கிறது.
இவ்வாறு நமது உடலில் எந்த சத்து அதிகரிக்கிறதோ, அவ்வாறே குழந்தை பிறக்கிறது. என்பதைப் புரிந்து கொண்டு உணவு உட்கொள்ள வேண்டும்.
|
Monday, April 27, 2015
பாலுடன் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
| பாலுடன் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் |
இதில் உள்ள புரோபயோடிக் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
கோடை காலங்களில் வெயிலின் தாக்கத்தால் உடலின் ஆற்றல் குறையும், இதனால் பாலுடன் தேன் கலந்து குடித்தால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கும்.
எலும்புகளின் ஆரோக்கியத்தை பேணி காக்க உதவும், பாலுடன் தேன் கலந்து குடித்ததால், எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.
இரவு தூங்கும் போது குடித்தால் நிம்மதியான தூக்கம் வரும்.
மலச்சிக்கலால் அவதிப்பட்டு வருபவர்கள், வெதுவெதுப்பான பாலில் தேனை கலந்து, அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் குணமடையும்.
சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள் இதனை குடித்தால், அதில் உள்ள ஆன்டி பாக்டீரியல், உடலில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து சளித்தொல்லையில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
மேலும் இவற்றில் உள்ள கனிமச்சத்துக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் இனப்பெருக்க மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
உடல் உள்ள கொழுப்புகளை கரைத்து எடையை குறைக்க உதவுகிறது. நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் உணவு உட்கொண்ட பின்னர், பாலுடன் தேன் கலந்து குடித்தால் நெஞ்செரிச்சல் குணமாகும்.
|
Sunday, April 12, 2015
அரை அவியல் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்
| அரை அவியல் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் |
பொறித்த முட்டையை காட்டிலும் அரை வேக்காடு (ஹாஃப் பாயில்) முட்டையை உட்கொள்ளுதலே நன்மையை அளிக்கும்.
அதற்கு காரணம் அதிலுள்ள ரிபோஃப்ளேவின் மற்றும் செலீனியம்.
அதிக அளவிலான புரதத்தை கொண்டுள்ள முட்டை கலோரிகளை அதிகரிப்பதில்லை. பொரித்த முட்டை போன்ற இதர முட்டை வகைகளுடன் ஒப்பிடுகையில் அரை வேக்காடு முட்டையில் கலோரிகளின் அளவு குறைவே.
அரை வேக்காடு முட்டையில் 78 கலோரிகளும், 5.3 கிராம் கொழுப்புகளும் மட்டுமே அடங்கியுள்ளது.
அரை வேக்காடு முட்டையில் கார்போஹைட்ரேட்ஸ், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் அடங்கியுள்ளது.
வலுவற்ற நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ள கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.
வலுவான உடல்நலத்தை கொண்டுள்ளவர்களுக்கு தான் அரை வேக்காடு முட்டை ஆரோக்கியத்தை அளிக்கும்.
நாம், பொரித்த முட்டை சாப்பிடுவதை விட அரைவேக்காடு முட்டையை சாப்பிட்டால் ஆரோக்கியம் கிடைக்கும்.
|
நுரையீரல் பாதிப்பை குறைக்கும் பீன்ஸ்
| நுரையீரல் பாதிப்பை குறைக்கும் பீன்ஸ் |
| பீன்ஸ் கலந்த உணவை தினமும் சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் கணிசமாக குறையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புகைபிடித்தல், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வந்த நுரையீரல், காற்று மாசுபடுதலாலும் தற்போது அதிகம் பாதிக்கப்படுகிறது.
இதனால் நுரையீரல் புற்றுநோய், நெஞ்சுச் சளி, மூச்சுத்திணறல் மற்றும் பல்வேறு சுவாசக் கோளாறுகள் மனிதர்களைத் தாக்குகின்றன.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கார்ட்டின் தொழிநுட்ப பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஒரு ஆய்வை ஜப்பானில் உள்ள ஒரு மருத்துவமனை ஆய்வுக்கூடத்தில் மேற்கொண்டனர்.
உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய காய்கறிகள் குறித்த இந்த ஆய்வின் முடிவில், நுரையீரல் பாதிப்பை பீன்ஸ் கணிசமாகக் குறைத்தது தெரியவந்தது.
மேலும், நோய்ப் பாதிப்பு இருப்பவர்கள் பீன்சை சாப்பிடும் போது நல்ல நிவாரணம் கிடைப்பதையும் ஆய்வாளர்கள் உறுதிசெய்தனர்.
பச்சை பீன்சில் வைட்டமின் பி 6, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் மாங்கனீஸ் சத்துகள் அதிகம் உள்ளன. இது தவிர புரோட்டீன் அதிகம் உள்ளது.
அதனால் பீன்சை முழுவதுமாக வேகவைப்பதைக் காட்டிலும், அரைவேக்காட்டுடன் சாப்பிடுவது சிறந்தது.
பீன்சை வேகவைக்கும்போது அந்தத் தண்ணீரை கீழே ஊற்றாமல் சாம்பார் அல்லது சூப் தயாரிக்கப் பயன்படுத்துவதன் மூலம் பீன்சின் முழுச் சத்துகளையும் பெறமுடியும்.
தினமும் சுமார் 50 கிராம் பீன்சை உட்கொண்டால் நுரையீரல் தொடர்பான நோய்த் தாக்குதலில் இருந்து 90 சதவீதம் வரை மனிதனுக்கு நோய் ஏற்படாது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
|
Tuesday, April 7, 2015
சப்போட்டாவின் சத்தான நன்மைகள்
| சப்போட்டாவின் சத்தான நன்மைகள் |
சப்போட்டாவின் மற்றொரு பெயர் சிக்கு. ஆங்கிலத்தில் ‘சப்போட்டா’ (sapota) என்றும் ‘சப் போடில்லா’ (sapodilla) எனவும் கூறப்படுகிறது.
சப்போட்டேசியே (sapotceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இதன் தாவரவியல் பெயர் ‘அக்ரஸ் சப்போட்டா’ (Achars sapota). இதன் தூய தமிழ்ப்பெயர், ‘சீமை இலுப்பை’. இலுப்பைப் பழத்தைப் போல் உருவமுடையதால் இப்பெயர் வந்தது.
சப்போட்டாவில் உள்ள குளுக்கோஸ் நம் உடலுக்கு அதிக ஆற்றலை வழங்குகிறது.மேலும் இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துக் காணப்படுகிறது.
சப்போட்டாவின் மகத்துவங்கள்
சப்போட்டாவில் அதிக அளவு வைட்டமின் ஏ- இருப்பதால் வயதான காலத்திலும் கூட, பார்வையை மேம்படுத்த உதவுகிறது.
சப்போட்டாவில் குளுக்கோஸ் நிறைந்திருப்பதால், அது உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கிறது.
இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துகள் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது.
சப்போட்டாவில் உள்ள கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ்(Phosperous) போன்றவைகள் எலும்புகளை வலுவாக்குவதுடன், சிறுநீரக கற்களை வெளியேற்றவும் உதவுகிறது.
இப்பழத்திலிருக்கும் பொட்டாசியம்(Pottasium), இரும்புச்சத்து, போலேட்(Bolet), நியாசின்(Niyasen) மற்றும் பேண்டோதெனிக்(Fontothenic) அமிலம் போன்றவைகள் செரிமான அமைப்பு முறையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.
சப்போட்டா விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய்யை கூந்தலுக்கு பயன்படுத்துவதால், தலைமுடி ஈரப்பதமாகவும் மற்றும் மென்மையாகவும் இருக்கும்.
இதில் கார்ப்போஹைட்ரேட்(Carbohydrate) மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் கர்ப்பிணிகளுக்கு உடல் பலவீனம், குமட்டல் மற்றும் மயக்கம் உள்ளிட்டவை குறைக்கிறது.
மேலும் இதில் இருக்கும் பாலிஃபீனாலிக் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள்(polyphenolic antioxidants), வைரஸ்(Virus) மற்றும் பக்டீரியாக்களை(Bacteria) எதிர்க்க வல்லது.
|
Friday, March 27, 2015
தேங்காய்
இயற்கையின் கொடையான தேங்காய் பல்வேறு நோய்களில் இருந்து தடுத்து நமது உடல்நலத்தை பாதுகாக்கிறது.
பொதுவாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இளநீர் என்றால் பிடிக்கும்.
ஆனால் தேங்காய் ஆபத்தானது என அதனை தவிர்ப்பவர்கள் ஏராளம்.
குறிப்பாக இன்றைய காலகட்டதில் பலரும் சர்க்கரை நோயாளிகள் தேங்காய் வாங்குவதையே தவிர்த்து விடுகின்றனர்.
ஆனால் இந்த தேங்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு வினை என்றாலும், இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.
தேங்காயில் புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் உள்ளன.
தென்னையின் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம்.
தேங்காயின் மகத்துவங்கள்
தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது.
தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.
தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக்.
தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.
மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து.
தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.
தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக் கால ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளன.
தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது.
தேங்காய் பால்
தேங்காயை மிருதுவாகத் துருவிக் கொள்ளவும்.
கல்லுரல் அல்லது மிக்ஸியை நன்றாகக் கழுவித்துடைத்து, துருவியை தேங்காயையும்(2 தேங்காய்) அரிசியையும்(2 டீஸ்பூன்) போட்டுச் சேர்த்து நன்றாக அரைத்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பாலைப் பிழியவும்.
முழுவதையும் பிழிந்துவிட்டு, அந்தத் தேங்காயை மறுபடியும் சுமார் 1 கப் நீர் விட்டு, நன்றாக அரைத்துப் பிழியவும்.
முதலில் பிழிந்து வைத்துக் கொள்ளப்பட்ட பாலையும், இரண்டாவதாக பிழிந்த பாலையும், ஒரு மெல்லிய வெள்ளைத் துணியிலோ அல்லது சல்லடையிலோ வடிகட்ட வேண்டும்.
பிறகு வாணலியில் தேங்காய்த் துருவலோடு சர்க்கரை/வெல்லத்தை(1 கப்) மறுபடியும் கொஞ்சமாக நீர் வீட்டு அரைத்து, துணியில் போட்டு, ஒட்டப் பிழிந்து வடிகட்டி, பாலுடன் சேர்த்து வைக்கவும்.
பாலைக் கரண்டியால் அடிக்கடி கிளறிவிட்டு, நல்ல சூடு வந்ததும், சர்க்கரையை அல்லது வெல்லத்தைப் போட்டுக் கிளறி விட்டு, கொதி வரும் சமயங்களில் இறக்கி, ஏலக்காய்பொடியை(தேவையான அளவு) போட்டால் தேங்காய் பால் ரெடி.
பயன்கள்
தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது.
வறட்டு இருமல் சரியாகும்.
தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து குடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும்.
தேங்காய் சட்னி
தேங்காய், பச்சைமிளகாய், சிறிய வெங்கயாம் - 2, இஞ்சி போன்றவற்றை அம்மியில் வைத்து நேவாக அரைக்கவும்.
தேவையான அளவிற்கு மேலே அரைத்ததில் தண்ணீரை சேர்க்கவும்.
அடுப்பில் மிதமான சூட்டுடன் வாணலியில் எண்ணையை விட்டு கடுகு, கருவேப்பில்லை, வெங்காயம் கொண்டு வதக்கவும்.
ஒரு நிமிடம் வதக்கியவுடன் மேலே அரைத்ததை கொண்டு தாளித்தால் சுவையான தேங்காய் சட்னி தயார்.
பயன்கள்
செரிமான பிரச்சனை வருவதை தவிர்க்கும்.
ஆண்மையை அதிகரிக்க உதவும்.
கர்ப்பிணிகளும் இதை சாப்பிடுவது நல்லது.
Wednesday, March 18, 2015
Your food choices and blood group
Certain "healthy" foods make your stomach rumble even as they offer a host of nutritional benefits to others. Rene Verma tells you why.
The other day, my husband declared during breakfast - 'I won't have sprouts any more. It makes my stomach feel funny.' I wondered how this "nutritious" do-gooder full of vitamins and minerals could make him uncomfortable. After sprouts, it was wheat or corn-based products that he complained about. He said all of them made him feel bloated. I decided to consult Dr Eti Bhalla, chief nutritionist, Paras Hospitals, Gurgaon. What she told me came as a surprise - our blood type plays a big role in deciding the foods we may be compatible with or not. How does the blood group decide our compatibility with different foods? Explains Dr Peter D'Adamo, a well-known naturopath and creator of the Blood Type Diet: Each blood type has a unique composition of digestive enzymes that determines how the body will react to different food groups. Basically, your blood type has a distinct way of recognising what is "alien" for you. When the body perceives a threat from such an "alien", it reacts violently, often leading to a host of health problems.
Picky O Group
People with type O blood, like my husband, are more prone to stomach problems because of the high acidic content in the stomach. So while they can digest protein well, they have to be cautious about consuming too many fats or carbohydrates. They are also known to have a sluggish metabolism so they must exercise regularly and avoid grains and heavier oils made from corn or peanut. Fresh fruits such as berries, plums, bananas and pears are beneficial as they are "friendly" with the typical stomach enzymes of those who have type O blood.
Hardy B Group
Of the four basic types, people with type B blood have the most resilient digestive systems. They usually aren't overly sensitive to food choices. 'They are lucky that their bodies aren't averse to grains, meat or dairy. They should just aim at a balanced diet with lots of green vegetables - corn, lentils, tomatoes and peanuts are best avoided,' advises Dr Eti.
Of the four basic types, people with type B blood have the most resilient digestive systems. They usually aren't overly sensitive to food choices. 'They are lucky that their bodies aren't averse to grains, meat or dairy. They should just aim at a balanced diet with lots of green vegetables - corn, lentils, tomatoes and peanuts are best avoided,' advises Dr Eti.
Sensitive A Group
On the other end of the spectrum are people with blood group A. Some studies suggest that these people have a low acidic content making it difficult for them to digest meat. Dr Eti says: 'This group has shown a tendency towards cardiac problems. So for them we recommend a vegetarian diet with restricted animal fat and dairy products - intake of plenty of fruits and vegetables lowers the risk of cardiovascular disease. Since they also have thicker blood, it's best for them to avoid fatty meat.'
Somewhere In The Middle - AB Group
This group combines the vulnerabilities of both A and B groups and falls in the sensitive zone. People with this blood type fare better with a diet that's more vegetarian in nature. Since they don't have enough stomach acid, they should - as far as possible - avoid dairy, alcohol, caffeine and citrus fruits.
This group combines the vulnerabilities of both A and B groups and falls in the sensitive zone. People with this blood type fare better with a diet that's more vegetarian in nature. Since they don't have enough stomach acid, they should - as far as possible - avoid dairy, alcohol, caffeine and citrus fruits.