Friday, August 19, 2016

தினமும் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டவரின் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி தெரியுமா?

பூண்டை சாப்பிட சிறந்த நேரம் காலை தான். ஏனெனில் இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக உடலால் உறிஞ்சப்படும்.

இரத்த அழுத்தத்திற்கு பூண்டு மிகச்சிறந்த மருந்து. அதிலும் இதனை வெறும் வயிற்றில் உட்கொண்டால், எவ்வித பக்கவிளைவுமின்றி இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும்.

 அனைவருக்குமே பூண்டு மிகவும் சக்தி வாய்ந்த மருத்துவ குணம் கொண்ட பொருள் என்பது தெரியும். நம் அன்றாட சமையலில் உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிக்க பூண்டு பயன்படுகிறது. தினமும் காலையில் எழுந்ததும் 1 ஸ்பூன் வெந்தயத்தை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்! இத்தகைய பூண்டு மிகுந்த காரத்தன்மை கொண்டது. அதோடு இதில் சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடுவதில் சிறந்த பொருளும் கூட. நம் முன்னோர்களும் பூண்டைக் கொண்டு ஏராளமான பிரச்சனைகளுக்கு தீர்வளித்து வந்தனர். தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்!!! இத்தகைய பூண்டை ஒருவர் அதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்ததில், அவரது உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் சாப்பிட சிறந்த நேரம் பூண்டை சாப்பிட சிறந்த நேரம் காலை தான். ஏனெனில் இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக உடலால் உறிஞ்சப்படும். இரத்த அழுத்தம் இரத்த அழுத்தத்திற்கு பூண்டு மிகச்சிறந்த மருந்து. அதிலும் இதனை வெறும் வயிற்றில் உட்கொண்டால், எவ்வித பக்கவிளைவுமின்றி இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும். உட்காயம் குணமாகும் பூண்டு மற்றொரு சிறப்பான குணம், அது உடலினுள் ஏற்படும் உட்காயங்களைக் குணப்படுத்தும். ஆகவே உட்காயங்கள் குணமாக கண்ட மாத்திரைகளைப் போடுவதைத் தவிர்த்து, பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.

பூண்டு பல்வேறு வகையான பூஞ்சை தொற்றுகள், பாக்டீரியா தொற்றுக்களை தடுக்கவல்லது. அதிலும் ஒருவர் சிலநாட்கள் பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலைத் தாக்கிய நோய்த்தொற்றுக்களில் இருந்து எளிதில் விடுபடலாம்.

முக்கியமாக பூண்டையை பச்சையாக காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் ஏற்படுவதில் இருந்து விலகி இருக்கலாம்.

பூண்டு நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தி, ஏராளமான நுரையீரல் பிரச்சனைகளான நிமோனியா, மூச்சுக்குழாய் அழற்சி, நெஞ்சு சளி, இருமல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

மருந்து மாத்திரைகளை விட சிறந்தது மொத்தத்தில் ஒரு பல் பூண்டில் 5 மி.கி கால்சியம், 12 மிகி பொட்டாசியம் மற்றும் 100 சல்ப்யூரிக் சேர்மங்கள் உள்ளதால், இது மருந்து மாத்திரைகளை விட சிறந்தது என்பதை யாரும் மறவாதீர்கள். 

ஒரு மாதம் சுடுநீரில் மிளகுத் தூள் கலந்து குடித்தால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?

நோயெதிர்ப்பு சக்தியை வலிமையுடன் வைத்துக் கொள்ள ஏராளமான வழிகள் உள்ளன. அதில் ஒன்று அதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 1 டம்ளர் சுடுநீரில் 1 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து குடிப்பது. இந்த முறையை ஒரு மாதம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், நோயெதிர்ப்பு சக்தி வலிமையாவதோடு, இன்னும் வேறு பல நன்மைகளும் கிடைக்கும்.
சுடுநீரில் மிளகுத் தூள் கலந்து தினமும் காலையில் குடித்தால், உடலில் உள்ள செல்கள் நீர்ச்சத்தைப் பெற்று, உடல் வறட்சி, சோர்வு, வறட்சியான சருமம் போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

சுடுநீரில் மிளகுத் தூளைக் கலந்து தொடர்ச்சியாக பருகி வரும் போது, உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்பட்டு, கொழுப்புச் செல்கள் கரைக்கப்பட்டு உடல் எடை வேகமாக குறையும்.

அதிகாலையில் மிளகுத் தூளை சுடுநீரில் சேர்த்து கலந்து பருகினால், உடல் மற்றும் சருமத்துளைகளில் இருக்கும் நச்சுக்கள் வெளியேற்றப்படுவதோடு, சருமத்தில் எண்ணெய் பசை உற்பத்தியும் குறைந்து, சருமம் ஆரோக்கியமாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.

உடலை சுத்தம் செய்ய நினைப்பவர்கள், ஒரு மாதம் அதிகாலையில் வெறும் வயிற்றில் சுடுநீரில் மிளகுத் தூள் சேர்த்து கலந்து குடித்து வாருங்கள். இதனால் உடலில் உள்ள நச்சுமிக்க டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, உடலுறுப்புக்களின் செயல்பாடுகள் சீராக்கப்பட்டு, மொத்தத்தில் உடலின் ஆரோக்கியம் மேம்பட்டு இருப்பதை நீங்களே உணர்வீர்கள்.

Tuesday, July 12, 2016

பாலுடன் எதை சேர்க்க கூடாது?

கால்சியம் சத்து நிறைந்த பாலுடன் சில உணவுகளை சேர்ந்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் அது ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மீனை, பாலுடன் ஒன்றாக எடுத்துக்கொள்வது தவறு. மீன் மற்றும் பாலை ஒன்றாக எடுத்துக்கொள்ளும்போது, ரத்தம் கெட்டுப்போய், உடலின் நுண்ணியப் பாதைகள் அடைக்கப்படுகின்றன. சீரான ரத்த ஓட்டம் பாதிப்பு அடையும்.
அதேபோல், பாலுடன் வாழைப்பழத்தைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. இதனால், உடலில் சளி அதிகம் தேங்கும்.
தர்பூசணி சாப்பிட்ட பிறகு பால் குடித்தால், அது அசெளகரியம் தருவதோடு, வாயுத்தொல்லையையும் ஏற்படுத்தும்.
பால் மற்றும் முட்டை இரண்டிலும் அதிகப் புரதம் இருப்பதால், இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால், செரிமானப் பிரச்னைகள் ஏற்படும்.
கீரையும் பாலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகளில் ஒன்று. கீரைகளில் செல்லுலோஸ் (Cellulose) அதிகம் உள்ளதால், செரிமானம் நடைபெற இயல்பாகவே அதிகம் நேரம் எடுக்கும். கீரையில் உள்ள டானின் (Tanin), பாலை திரளச்செய்வதால், செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Monday, June 20, 2016

கழுத்து வலியா? இனி கவலை வேண்டாம்!


அலுவலகத்தில் வேலை பார்க்கும் எல்லோருக்கும், முக்கியமாக கணனி முன் உட்காரும் பெரும்பாலான மக்கள் அவதிப்படுவது கழுத்து வலியால் தான். இதற்கான சில முதலுதவிகளை இங்கே காணலாம்.
  • மனதளவில் இறுக்கமின்றி "ரிலாக்ஸாக" இருக்கவும்.
  • பாதிக்கப்பட்ட பகுதிக்கு வெந்நீர் (அல்லது) ஐஸ் ஒத்தடம் தரவும். கடுமையான வலி ஏற்படும் சமயத்தில் படுக்கையில் படுத்து ஓய்வு எடுக்கவும்.
  • தசைகள் இறுக்கம் அடைவதைத் தவிர்க்க ஒரே நிலையில் நெடுநேரம் கழுத்தை வைத்திருக்காமல் அடிக்கடி தலையை அசைக்கவும்.
  • அலுவலகத்தில் மேஜைப்பணி புரியும் போதும், கம்ப்யூட்டர் முன் அமரும் போதும் நேரான கோணத்தில் அமரவும்.
  • நெடுநேரம் தொடரும் `டிரைவிங்'கைத் தவிர்க்கவும். அடிக்கடி ஓய்வுக்காக வண்டியை நிறுத்தவும்.
  • குப்புறப்படுக்காதீர்காதீர்கள் (வயிறு தரையில் படும்படி) இந்த நிலை கழுத்தை முறுக்கி விடும்.
  • உறங்கும் போது உயரமான அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தலையணைகளை உபயோகிக்க வேண்டாம்.
  • மேஜையில் அமர்ந்து பணியாற்றும்போது நெடுநேரம் தலை கவிழ்ந்த நிலையைத் தவிர்க்கவும்.
கழுத்து வலிக்கான பயிற்சிகளை தொடர்ந்து செய்யவும். இதற்கான யோகா பயிற்சிகளும் உள்ளன. இவை கழுத்தைப் பாதுகாக்கிற தசைகளை உறுதி பெறச் செய்யும். எனினும் கழுத்துப் பயிற்சியில் மிதமிஞ்சி விடக்கூடாது. நிதானமாகவும், படிப்படியாகவும் பயிற்சி செய்ய வேண்டும்.

Wednesday, June 1, 2016

அலர்ஜி எதனால் வருகிறது? இதோ தடுக்கும் வழிமுறைகள்

தடுப்பு முறைகள்
அலர்ஜியை தடுக்க சிறந்த வழி, அறிகுறிகளைஅறிந்துகொண்டு அந்த வகை உணவுகளை உறுதியாகத் தவிர்த்து விடுவதுதான்.
வெளியில் சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் புதிய உணவு வகைகளை சாப்பிடவேண்டாம்.
வறுக்கப்பட்ட உணவுகள், வேகவைக்காமல், மாவு சேர்க்கப்பட்ட உணவுகள், சுவையை அதிகப்படுத்தப் பயன்படும் சூப், குழம்புகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும். சாப்பிட்டபின் பழவகைகளை உண்ண வேண்டாம்.

சீரகத்தை வறுத்து பொடியாக்கி தினமும் தண்ணீரில் போட்டுக்காய்ச்சி குடித்து வருவதன் மூலம் அலர்ஜி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
மேலும் புதினாவை வாரத்தில் 3 முறை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். மோரில் உப்பு கலந்து வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிப்போட்டு சாப்பிடுவதன் மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
பசலைக்கீரை சூப் குடிப்பதன் மூலம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் அலர்ஜி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.

அலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள்
தட்பவெப்பம், உணவு, சுற்றுச் சூழல் மாசு உள்பட பல காரணங்களால் அலர்ஜி உண்டாகிறது.
மலரின் மகரந்தம், செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய், பூனை ஆகியவற்றின் தோலில் உள்ள ஒரு பொருள், முடி ஆகியவற்றில் இருந்தும் அலர்ஜி ஏற்படலாம்.
அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களுடன் தொடர்பு ஏற்பட்டதும் உடல் இம்யுனோகுளோபுலின் இ என்ற எதிர்ப்புப் பொருளை உற்பத்தி செய்கிறது. இதன் விளைவாக கண் மற்றும் சுவாச வழிகளில் ஹிஸ்டமின் போன்ற எதிர்ப்புத் தன்மை மிகுந்த பொருட்கள் உருவாகின்றன.
இது போன்ற வேதிப் பொருட்கள் உடலில் உற்பத்தியாவதால் கண்ணில் நமைச்சல், கண்கள் வீங்கி சிவத்தல், மூக்கடைப்பு, மூக்கில் வடிதல், தொடர் தும்மல், இருமல், தோலில் சிவந்த தடிப்பு போன்ற அலர்ஜிக்கான அறிகுறிகள் உண்டாகிறது.

Friday, March 18, 2016

ஐஸ்

அடிக்கடி உங்களுக்கு சளி பிடிக்கிறதா? கழுத்திற்கு பின் ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைத்து வாருங்கள். இதன் மூலம் சளித் தொல்லையில் இருந்து நிச்சயம் விடுபடுவீர்கள்.

Monday, March 7, 2016

சாப்பிட வேண்டிய பச்சைகாய்!

சாப்பிட வேண்டிய பச்சைகாய்!

பச்சைக்காய்கறிகளை சாப்பாட்டில் சேர்ப்பது ஆரோக்கியத்தை வலுவாக்கும்.
அந்த வகையான காய்கறிகளில் ஒன்று தான் அவரைக்காய்.
அவரைக்காயில் நிறையப் புரதச்சத்து, குறைவான கொழுப்பு, தேவையான கனிமச்சத்துக்கள் மற்றும் விட்டமின்கள் உள்ளன.
அவரைக்காயின் மகத்துவங்கள்
அவரைக்காய் பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறையும்.
அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.
அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுவதால், இதனை இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை சரியாகும்.
அவரைக்காய் பொரியல் செய்து சாப்பிட்டால், மலச்சிக்கல் நீங்க, வயிற்றுப் பொருமலை குறையும்.
இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எலும்பு பிரச்சனையை வரவிடாமல் தடுக்கும்.
அறிவுத்திறனை அதிகரிக்க உதவும். மேலும் மூட்டு வலிக்கு அவரைக்காய் பொரியல் சாப்பிடுவது ஒரு சிறந்த மருந்து.

முட்டைகோஸ் ஜூஸ் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

முட்டைகோஸ் ஜூஸ் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸில் நம் உடலுக்கு தேவையான நன்மைகள் நிறைந்துள்ளன.
முட்டைகோஸில் பைட்டோ நியூட்ரியண்டுகள், வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே, நார்ச்சத்துகள் அடங்கியுள்ளன
முட்டைகோஸை சமைத்து சாப்பிடும் போது அளவுக்கு அதிகமாக வேக வைக்ககூடாது, அப்படி செய்தால் அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். எனவே முட்டைகோஸை ஜூஸாக செய்து சாப்பிடலாம்.
இதற்கு முதலில், முட்டைகோஸை எடுத்து சுடு தண்ணீர் அல்லது வினிகரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்த பின்னர் மிக்சியில் போட்டு அரைத்தால் ஜூஸ் ரெடி, ஒருநாளைக்கு ஒரு டம்ளருக்கு மேல் ஜூஸ் பருகக்கூடாது.
* முட்டைகோஸ் ஜூஸ் குடித்து வந்தால் வயிற்றின் உட்புறம் வலிமை அடையும், மேலும் குடலை சுத்தம் செய்வதால் அல்சர் குணமாகிறது.
* இதில் சல்போரோபேன் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. மேலும் ஐசோசையனேட் நுரையீரல், வயிறு, மார்பகம் மற்றும் குடல் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.
* இதிலுள்ள வைட்டமின் சி சரும பிரச்னைகள் வராமல் காத்துக் கொள்கிறது.
* தினமும் முட்டைகோஸ் ஜூஸ் குடித்து வந்தால் கண்புரை நோயிலிருந்து விடுபடலாம்.
* இதிலுள்ள வைட்டமின் கே, ஆந்தோசையனின் மூளையை கூர்மையாக்கி மனதை ஒருமுகப்படுத்துகிறது.
* குறிப்பாக தினமும் முட்டைகோஸ் ஜூஸ் குடித்து வந்தால், கழிவுகள் வெளியேற்றப்பட்டு விரைவில் உடல் எடை குறைந்துவிடும்.

Tuesday, March 1, 2016

Eating chocolate can cure your cough

Having a tickle in your throat and a cough can be very irritating and uncomfortable, especially when it happens at the worst possible moment. Next time when you find yourself in such a situation, just eat a piece of dark chocolate.
Aline Maurice, a professor and head of the department of cardiovascular and respiratory studies at the University of Hull (United Kingdom), came to the conclusion that chocolate really works better for a sore throat and dry cough than some other prescription-free medicines.
Recent studies have shown that patients who took medicine with cocoa extract in it recovered much faster (within 2 days) than those who took conventional cough syrup. Another study conducted at Imperial College in London discovered that cocoa contains alkaloid, which has a cough-reducing effect superior to codeine, a substance widely used as an antitussive.
It has a logical explanation: chocolate’s texture is stickier than regular cough medicines, meaning that it is better at coating your throat and triggering nerve endings that protect it from incessant coughing.
Further studies will have to be carried out in this regard, but we here at Bright Side have decided to go ahead and test this tasty theory on ourselves.

Monday, February 29, 2016

அசைவ உணவுகள் செரிமானம் அடைய ஆகும் நேரம் எவ்வளவு?

அசைவ உணவுகள் செரிமானம் அடைய ஆகும் நேரம் எவ்வளவு?

உணவு செரிமானவது முதலில் வாயில் தொடங்குகிறது.
உங்கள் உமிழ்நீர், செரிமான சக்தி மிக்கது. செரிமான வேலை முதலில் இந்த நீர் மூலம்தான் வாயில் தொடங்குகிறது.
உங்கள் வயிறு ஒரு தடிமனான பை. அதன் உள்ளே நீங்கள் உண்ட உணவு, மற்றும் வயிற்றின் நீர்கள் கலக்கப்பட்டு, கடையப்படுகிறது.
உங்கள் கல்லீரல் ஒரு "ரசாயான தொழிற்சாலை' அது விட்ட மின்களை சேகரிக்கிறது.
உங்கள் வயிறை விட்டு வெளியே வந்த உணவு, சிறுகுடலில் செல்கிறது. உணவின் நல்ல சத்துக்கள், அதன் மெல்லிய சுவர் வழியே ஊடுருவி ரத்ததில் கலக்கிறது.
உங்கள் உடலால் செரிமானம் செய்ய முடியாத உணவை பெருங்குடல் வைத்து கொள்ளும். பின்னர் அது உங்கள் உடலிலிருந்து மலக்குடல் மூலம் வெளியேற்றப்படுகிறது.
மேலும், பித்தநீர்பையில் சிறுநீர் சேகரிக்கப்படுகிறது. அது நிரம்பியவுடன் கழிவாக வெளியேற என்கிற உந்துதல் உங்களிடம் ஏற்படுகிறது.
செரிமானம் ஆக எவ்வளவு நேரம்?
உணவுகளை பொறுத்து செரிமான நேரங்கள் மாறுபடும், உதாரணத்திற்கு நீர்ச்சத்து உணவுகள் என்றால் விரைவில் செரிமானம் அடைந்துவிடும்.
அசைவ உணவுகள் என்றால் அதிக நேரம் எடுத்துகொள்ளும்.
அசைவ உணவுகள்
* மீன் - அரை மணி நேரம்
* முட்டை - 45 நிமிடங்கள்
* கோழி - 2 மணி நேரம்
* வான் கோழி - இரண்டரை மணி நேரம்
* ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி - சுமார் 3 முதல் 4 மணிநேரம்

காய்கறிகள் மற்றும்  பழங்கள்
நீர்க்க இருக்கும் பழச்சாறு - 15 முதல் 20 நிமிடங்கள்
* கெட்டியான பழச்சாறு காய்கறி சூப், தர்பூசணி, ஆரஞ்சு, திராட்சை - 20 முதல் 30 நிமிடங்கள்
* ஆப்பிள், செர்ரி பழங்கள் மற்றும் தக்காளி, வெள்ளரிக்காய், காய்கறி சாலட் - சுமார் 40 நிமிடங்கள்
* காலிஃப்ளவர், சோளம் - சுமார் 45 நிமிடங்கள்
* கேரட், பீட்ரூட் போன்ற வேர்க்கிழங்குகள் - சுமார் 50 நிமிடங்கள்
* அரிசி, ஓட்ஸ் - சுமார் ஒன்றரை மணி நேரம்
* சோயா பீன்ஸ் மற்றும் பால், பாலாடைக்கட்டி - சுமார் 2 மணி நேரம்

இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் அற்புத உணவுகள்!

இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் அற்புத உணவுகள்!

உடலியக்கம் சீராக நடைபெறுவதற்கு இரத்தம் மிகவும் முக்கியமானது.
ஏனெனில் இரத்தம் தான் உடலின் அனைத்து பாகங்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது. உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால், அனீமியா என்னும் இரத்த சோகை ஏற்படும்.
குறிப்பாக இரத்த சோகை ஆண்களை விட பெண்களுக்கு தான் (காரணம் கர்ப்பம் மற்றும் மாதவிடாய் சுழற்சி) அதிகம் ஏற்படும்.
ஆகவே உடலில் உள்ள இரத்தத்தின் அளவை பராமரிக்க வேண்டியது அவசியம்.
கருப்பு எள்ளு
இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதனை உணவின் மேல் தூவி சாப்பிடலாம் அல்லது எள்ளு மிட்டாய் வாங்கியும் சாப்பிடலாம். இதனால் இரத்தத்தின் அளவை அதிகரிக்க முடியும்.

பேரிச்சம் பழம்
பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. எனவே தினமும் இரவில் 2-3 பேரிச்சம் பழத்தை பாலில் போட்டு சாப்பிட்டு வருவது நல்லது.

ஆப்பிள்
ஆப்பிளில் கூட இரும்புச்சத்து உள்ளது. அதுமட்டுமின்றி, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவையும் அதிகம் உள்ளது. அத்தகைய ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை நீங்கும்.

உலர் திராட்சை
உலர் திராட்சையில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் உள்ளது. ஆகவே இதனை தினமும் மாலை நேரத்தில் தீனிகள் சாப்பிடும் நேரத்தில் சாப்பிட்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம்.

பீட்ரூட்
பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்த ஊறும் என்று சொல்வார்கள். ஏனெனில் பீட்ரூட்டில் ஃபோலிக் ஆசிட் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது.
மேலும் நார்ச்சத்தும் இதில் உள்ளது. எனவே பீட்ரூட்டை வாரம் ஒருமுறை தவறாமல் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

நெல்லிக்காய்
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, உடலில் இரத்தத்தின் அளவும் அதிகரிக்கும்.

மாதுளை
மாதுளையில் இரும்புச்சத்து, புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் இதில் மற்ற கனிமச்சத்துக்களும், விட்டமின்களும் நிறைந்துள்ளது. ஆகவே இவற்றை அன்றாடம் உட்கொண்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை குணமாகும்.

உருளைக்கிழங்கு சாப்பிட்டால் இவ்வளவு தீமைகளா?

உருளைக்கிழங்கு சாப்பிட்டால் இவ்வளவு தீமைகளா?

பாலில் உள்ள சத்துகளுக்கு நிகராக உருளைக்கிழங்கில் சத்துகள் இருந்தாலும் முளைவிட்ட மற்றும் பச்சை நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளை கருவுற்ற பெண்கள் உண்பதால் கருச்சிதைவு ஏற்படக் கூடும்.
பிறக்கும் குழந்தைகள் பிறவிக்குறைபாடுகளுடன் பிறப்பதற்கும் வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
உருளைக்கிழங்குகளை நீண்டநாள் சேமித்து வைப்பதால் அவற்றில் முளைவிடுகின்றன. நல்ல உருளைக்கிழங்கோடு ஒப்பிடும்போது இவை ருசியாகவோ, ஆரோக்கியமானதாகவோ இருப்பதில்லை.
முளைவிட்ட உருளைக்கிழங்குகளில் காணப்படும் சாக்கோனைன் (Chaconine) மற்றும் சாலனைன் (Solanine) ஆகியவை நச்சுப் பொருட்களைக் கொண்டுள்ளன.
Solanine நச்சுப்பொருள் சிறிது இருந்தாலும் விஷமாக மாறிவிடும் அபாயம் ஏற்படுகிறது. விலங்குகள், பூச்சிகள், பூஞ்சைக்கு எதிரான இயற்கை பூச்சிக்கொல்லிகளாக செயல்படும் இவை தாவரங்களுக்கு நன்மை தருபவை.
பூச்சிக் கொல்லிகளாக செயல்படும் இவற்றை மனிதன் உண்ணும்போது எத்தகைய விளைவுகள் ஏற்படும்.

சாக்கோனைனைவிட, சாலனைன் அதிக நச்சுத்தன்மை உடையது. சிறிதளவு உடலில் கலந்தாலும் தீவிரமான பக்க விளைவை ஏற்படுத்தக் கூடியது.
குடல் பாதையில் எரிச்சல் உண்டாக்கி பலவகை குடல் நோய்களுக்கு காரணமாகிறது. இதோடு, முளைவிட்ட உருளைக்கிழங்கில் உள்ள மாவுப்பொருள் (Starch) சர்க்கரையாக மாறிவிடுவதால் உடல் நலத்திற்கு தீங்கானது.
உருளைக்கிழங்கின் இலை, தண்டு, கனிப்பகுதியை பயன்படுத்தக் கூடாது. கிழங்குப் பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
அடுத்ததாக பச்சை நிறத் திட்டுகள் உள்ள உருளைக்கிழங்குகளையும் மேல்தோல் சுருங்கி உள்ளவற்றையும் பயன்படுத்தக் கூடாது.
சூரிய ஒளிபடும் இடங்களில் அதிக நேரம் இருப்பதால் பச்சைநிறத் திட்டுகள் உண்டாகின்றன.
கிளைகோல்கலாய்ட் (Glycoalkaloid) இருப்பதால், இதுவும் தீங்கானதே. இவற்றை உபயோகிக்காமல் அழித்துவிடுவதே சிறந்தது.
நச்சுப்பொருட்கள் உள்ள முளை வந்த உருளைக்கிழங்குகளை சமைத்து சாப்பிடும்போது தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும்.

Thursday, February 25, 2016

நார்த்தங்காய் ஊறுகாய்

நார்த்தங்காய் ஊறுகாய் சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் பாருங்கள்!
[ புதன்கிழமை, 24 பெப்ரவரி 2016, 02:20.23 பி.ப GMT ]
வயிற்றில் ஏற்படும் புண்களுக்கு நார்த்தங்காய் ஊறுகாய் ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
நா‌ர‌த்த‌ங்காயை வ‌ட்ட வ‌ட்டமாக நறு‌க்‌கி உ‌ப்பு சே‌ர்‌த்து ஒரு ம‌ண் பானை‌யி‌ல் இ‌ட்டு வாயை து‌ணியா‌ல் மூடி ‌விடவு‌ம்.
இதனை அ‌வ்வ‌ப்போது வெ‌‌யி‌லி‌ல் உல‌ர்‌த்‌தி வரவு‌ம். இ‌ப்படி 40 நா‌ட்க‌ள் செ‌ய்து ‌பிறகு அ‌தி‌ல் இரு‌ந்து ‌தினமு‌ம் ஒரு து‌ண்டை எடு‌த்து காலை‌யிலு‌ம், மாலை‌யிலு‌ம் சா‌ப்‌பி‌ட்டு வர வ‌யி‌ற்று‌ப் பு‌ண் குணமாகு‌ம்.
கனிகளில் அமினோ அமிலங்கள், விட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது.
நார‌த்த‌ங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சுத்தமடையு‌ம்.
வாத‌ம், கு‌ன்ம‌வ‌யி‌ற்று‌ப் பு‌ண், வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம். ப‌சியை அ‌திக‌ரி‌க்கு‌ம்.
நார்த்தை பழ‌த்‌தி‌ன் மே‌ல் தோலை தே‌ன் அ‌ல்லது ச‌ர்‌க்கரை‌ப் பா‌கி‌ல் ஊற வை‌த்து ந‌ன்கு ஊ‌றிய ‌பி‌ன் ‌சீத‌க் க‌ழி‌ச்ச‌ல் உடையவ‌ர்களு‌க்கு கொடு‌க்க ந‌ல்ல பல‌ன் தரு‌ம்.
நார்த்தை பழ‌த்தை சாறு ‌பி‌ழி‌ந்து குடி‌த்து வர உட‌ல் வெ‌ப்ப‌த்தை போ‌க்‌கி கு‌ளி‌ர்‌ச்‌சி தரு‌ம். வா‌ந்‌தியையு‌ம், தாக‌த்தையு‌ம் த‌ணி‌க்கு‌ம்.
நார்த்த‌ங்கா‌ய் இலைகளை நர‌ம்பு ‌நீ‌க்‌கி ந‌ல்லெ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு வத‌க்‌கி, அதனுட‌ன் வெ‌ள்ளை உளு‌ந்த‌ம் பரு‌ப்பு, கடலை‌ப் பரு‌ப்பு, தே‌ங்கா‌ய் துருவ‌ல் வறு‌த்து சே‌ர்‌த்து ‌மிளகா‌ய், உ‌ப்பு, பு‌ளி, பெரு‌ங்காய‌ம், க‌றிவே‌ப்‌பிலையு‌ம் சே‌ர்‌த்து துவையலாக அரை‌த்து சாத‌த்துட‌ன் ‌பிசை‌ந்து சா‌ப்‌பிடலா‌ம்.
சா‌ப்‌பி‌ட்டது‌ம் ஏ‌ப்ப‌ம் வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தாலு‌ம், ‌‌ஜீரணமாக நெடுநேர‌ம் ஆனாலு‌ம் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகாயை சா‌ப்‌பி‌ட்டா‌ல் உடனடி பல‌ன் ‌கி‌ட்டு‌ம்.
வ‌யி‌ற்‌றி‌ல் வாயு‌ப் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌ம் ‌நிலை‌யி‌ல் ஒரு ஊறுகா‌ய் து‌ண்டை எடு‌த்து வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று ‌தி‌‌ண்ணா‌ல் வாயு‌க் கோளாறு ‌விரை‌வி‌ல் ‌நீ‌ங்கு‌ம்.

A faster acting cough relief



A faster acting cough relief



Many recent studies have concluded that the extract from a natural pineapple juice can get rid of the mucus five times faster than other OTC cough medicines that can be found in the pharmacies, thereby it helps people that are suffering from accumulations of mucus, to recover 4.8 times faster than the people that are taking conventional medicines.



Pineapple juice fights mucus


Consuming pineapple juice doesn’t just soothe the irritation of nasty coughs, it also helps you reduce the annoying mucus. Back in 2010, researches were done attempting to find treatments to help people suffering from tuberculosis. The findings of the reports were published in the “Der Pharma Chemica”, including the fact that natural pineapple juice, mixed with honey, salt and pepper, taken daily helps to dissolve the mucus that deposits in the lungs, causing illnesses like Mycobacterium Tuberculosis.

Why you should make your own juice?

Many pineapple juices that can be found in the supermarkets include added sugar, so if you are watching what you eat, and managing your weight, it’s best to go for the natural unsweetened variety which can be found in most of the good supermarkets. Even a better solution for all holistic health lifestyle lover, is the juicer. If you have one at home, than you can buy fresh pineapples and make your own juice.



Here’s the recipe that will help you make your own natural pineapple juice cough mixture.


  • Fresh lemon juice – approximately a ¼ of a cup
  • 1 cup of fresh pineapple juice – preferably home juiced
  • 1 tablespoon of unprocessed honey
  • A small piece of ginger – about 3 inches long
  • Half a teaspoon of hot chili pepper


Add all the ingredients in a juicer, and blitz! Get rid of the mucus and the annoying cough faster 

Tuesday, February 9, 2016

காலை உணவுக்கு முன் குடிக்க வேண்டியவை!

காலை உணவுக்கு முன் குடிக்க வேண்டியவை!

காலையில் எழுந்தவுடன் டீ, காபி குடிப்பதை எல்லோரும் வழக்கமாக கொண்டிருப்பார்கள்.
ஆனால், டீ, காபி குடிப்பதை நிறுத்திவிட்டு தண்ணீர் நிறைந்த நீராகாரங்களை குடித்து வந்தால், உடற்சக்தி அதிகரிக்கும். சிறுநீரக செயல்பாடு, செரிமானம், இரத்த ஓட்டம் போன்றவை மேம்படும்.
தண்ணீர்
காலை எழுந்தவுடன் தண்ணீருடன் அந்த தினத்தை தொடங்குவது சிறப்பு. இது வளர்ச்சிதை மாற்றத்தை 25% வரை வேகப்படுத்த உதவுகிறது. குறைந்தபட்சம் 500 மில்லி நீராவது பருகுங்கள்.

எலுமிச்சை நீர்
எலுமிச்சை நீர் தண்ணீரில் எலுமிச்சை நீரை கலந்து காலை எழுந்ததும் பருகுங்கள். இது உடல் உறுப்புகள் சுறுசுறுப்புடன் இயங்க உதவுகிறது. மேலும், குடல் இயக்கத்திற்கு ஊக்கமிளிக்கும்.

பூண்டு நீர்
பூண்டு நீர் பூண்டை நன்கு இடித்து, அதை நீரில் கலந்து குடியுங்கள். வெறும் வயிற்றில் இதை பருகுவது இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது, கல்லீரல் செயலாற்றல் சிறக்கவும் உதவுகிறது

மஞ்சள் நீர்
மஞ்சள் நீர் தினமும் காலையில் எழுந்ததும் நீரில் மஞ்சளை கலந்து பருகுவதால் ஆண்டி-ஆக்சிடன்ட்ஸ் உடலில் அதிகரிக்கிறது. மேலும், உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறையவும் இது பயனளிக்கிறது.

க்ரீன் டீ
க்ரீன் டீ நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் மற்றும் உடலில் புத்துணர்ச்சி அதிகமாக காலையில் எழுந்ததும் கிரீன் டீ பருகுங்கள்.

இஞ்சி டீ
இஞ்சி டீ காலையில் எழுந்ததும் சூடாக ஒரு கப் இஞ்சி டீ குடிப்பது உங்களை புத்துணர்ச்சி அடைய வைக்கிறது. இதிலிருக்கும் வைட்டமின் சி மற்றும் மக்னீசியம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்.

உருளைக்கிழங்கு ஜூஸ்
உருளைக்கிழங்கு ஜூஸ் சிறுநீரகத்தின் செயல்பாடு சிறக்க, கொலஸ்ட்ரால் அளவை குறைக்க, செரிமானத்தை ஊக்குவிக்க தினமும் காலை உணவருந்தும் முன்பு உருளைக்கிழங்கு ஜூஸ் பருகுங்கள்.

Monday, February 8, 2016

பூண்டுடன் பால் சேர்த்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

பூண்டுடன் பால் சேர்த்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

சமையலுக்கு பயன்படுத்தப்படும் பூண்டு பல்வேறு நோய்களை விரட்டும் மருந்தாக செயல்படுகிறது.
பூண்டு இதயநோயுடன் போராடி இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது, மேலும் ஜலதோஷத்தை குணமாக்க உதவி புரிகிறது.
நோய் தடுப்பு மண்டலத்திற்கு உறுதுணையாய் நிற்கும் பூண்டு புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உதவுகிறது.
பூண்டில் விட்டமின்கள் ஏ, பி1, பி2, பி6 ஆகியவைகளும், பொட்டாசியம், புரதச்சத்து, தாமிரசத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம் உள்ளிட்ட சத்துக்களும் நிரம்பி உள்ளன.
இந்த பூண்டுடன் பால் சேர்த்து குடித்தால் சிலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
பூண்டுடன் பால்
* உங்களுக்கு திடீரென சளி மற்றும் காய்ச்சல் வந்தால், அப்போது பூண்டு சேர்த்த பாலைக் குடியுங்கள். இதனால் பூண்டில் உள்ள கலவைகள் சளி மற்றும் காய்ச்சலில் இருந்து உடனடி விடுதலைக் கொடுக்கும்.
* உங்கள் முகத்தில் முகப்பரு அதிகம் இருந்தால், பூண்டு கலந்த பாலை முகத்தில் தடவுவதோடு, அவற்றைக் குடித்து வந்தால் பருக்கள் வருவதை முழுமையாகத் தடுக்கலாம்.
* தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும்.
அதிலும் பிரசவம் முடிந்த பின், பூண்டு பாலை குடித்து வந்தால், குழந்தைக்கு தினமும் போதிய அளவு தாய்ப்பால் கிடைக்கும். மேலும் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பையும் கரைக்கும்.
* செரிமானம் பிரச்சனை இருப்பவர்கள் பூண்டு பால் குடிப்பது நல்லது. ஏனெனில் பூண்டு, உணவைச் செரிக்கும் செரிமான திரவத்தை தூண்டி, உணவுகள் எளிதில் செரிமானமாக உதவும்.
* பூண்டு கலந்த பாலைக் குடிப்பதன் மூலம் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கலாம். அதற்கு இந்த பாலை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

நீர்க்கடுப்பா? கவலையை விடுங்கள்!

நீர்க்கடுப்பா? கவலையை விடுங்கள்!

வெயில் காலங்களில் உடல் சூடு அதிகரிப்பது வழக்கமானது.
உடலுக்கு குளிர்ச்சியான பழரசம், இளநீர், மோர் போன்ற திரவ ஆகாரங்களை சாப்பிட்டு அதை சரி செய்கிறோம்.
சிலர் தண்ணீர் அதிகம் குடிக்காமல், வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிகின்றனர். இதனால் நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்பட்டு அவஸ்தை படுகின்றனர். இதை போக்க எளிமையான வைத்தியம் உண்டு.
ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்று விடும். வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் அளவுக்கு பொறுமை இல்லாதவர்கள், வெங்காயத்தை அப்படியே பச்சையாக சாப்பிடலாம்.
அப்படி சாப்பிட்டால் சில நிமிடங்களிலேயே நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும்.
வெயில் காலத்தில் சிலருக்கு உடம்பில் வெப்பக்கட்டிகள் தோன்றும். இதற்கு, வெங்காயத்தை நசுக்கி, சாறு பிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவினால், வெகுவிரைவில் கட்டிகள் மறைந்து நிவாரணம் கிடைக்கும்.
வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி, நெய்யில் வதக்கி சாப்பிட்டால் உடல் சூடு தணியும். வெப்பம் சம்பந்தமான பிரச்னைகள் எதுவும் வராது.

Thursday, February 4, 2016

தினமும் பச்சை திராட்சை சாப்பிட்டால் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

தினமும் பச்சை திராட்சை சாப்பிட்டால் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

பழவகைகளில் ஒன்றான திராட்சை உடல் நலனுக்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்குகிறது.
இதில், பச்சை திராட்சை அன்றாடம் எடுத்துக்கொண்டால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை உணர்வீர்கள்.
ஒரு கப் பச்சை திராட்சையில் உள்ள சத்துக்கள்
கலோரி - 104, நார்ச்சத்து - 1.4 கிராம், விட்டமின், மினரல்ஸ், ஆன்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

மருத்துவ பயன்கள்
கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால், தினமும் ஒரு கையளவு பச்சை திராட்சை சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள pterostilbene என்னும் உட்பொருள் கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைத்து, உடலில் கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்துக் கொள்ளும்.
திராட்சையில் காப்பர், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற எலும்புகளின் வலிமைக்கும், உருவாக்கத்திற்கும் தேவையான நுண் ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.
திராட்சையில் விட்டமின் ஏ மற்றும் சி வளமாக நிறைந்துள்ளது. இதில் விட்டமின் ஏ நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, உடலைத் தாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராட உதவும்.
அதேப் போல் விட்டமின் சி ஈறுகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஒன்று.
பச்சை திராட்சை ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுதலை தரும். மேலும் திராட்சை நுரையீரலில் ஈரப்பசையின் அளவை அதிகரித்து, வறட்டு இருமல் வருவதைத் தடுக்கும்.
மொத்தத்தில் சுவாச பிரச்சனை இருப்பவர்கள், பச்சை திராட்சையை தினமும் சிறிது உட்கொண்டு வருவது நல்லது.
பச்சை திராட்சையில் மிகவும் முக்கியமான கனிமச்சத்தான எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. இந்த கனிமச்சத்தானது உடலில் நீர்ச்சத்து மற்றும் இரத்தத்தில் அமிலத்தின் அளவை சீராக பராமரிக்க இன்றியமையாத ஒன்று. முக்கியமாக தசைகளின் செயல்பாட்டிற்கு எலக்ட்ரோலைட்டுக்கள் மிகவும் முக்கியம்.
தினமும் சிறிது பச்சை திராட்சை உட்கொண்டு வருவதன் மூலம் செரிமான பிரச்சனை மற்றும் வயிற்று எரிச்சல் போன்றவற்றில் இருந்து தீர்வு கிடைக்கும்.

Wednesday, February 3, 2016

குடை மிளகாய்

உணவில் அடிக்கடி சேர்க்க வேண்டிய காய்!

பல வண்ணங்களில் கிடைக்கும் குடைமிளகாயை சமைத்து சாப்பிட்டால் அற்புதமான நன்மைகள் கிடைக்கும்.
100 கிராம் குடை மிளகாயில் உள்ள சத்துக்கள்
புரோட்டின் - 0.99 கிராம், சக்தி - 31 கலோரி, சோடியம் - 4 மி.கிராம், கொழுப்பு - 0.3 மி.கிராம், தாதுச்சத்து - 6.02 மி.கிராம், பொட்டாசியம் - 211 மி.கிராம், மெக்னீசியம் - 12 மி.கிராம், விட்டமின் சி - 127.7 மி.கிராம், கால்சியம் - 7 மி.கிராம், இரும்பு - 0.43 மி.கிராம்.

மருத்துவ பயன்கள்
1. குடைமிளகாயில் கண்களுக்கு நன்மையளிக்கும் விட்டமின் ஏ வளமாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
2. குடைமிளகாயில் உள்ள கேப்சைனின் என்னும் உட்பொருள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.
3. தற்போது புற்றுநோய்கள் மக்களை அமைதியாக இருந்து தாக்குவதால், இவற்றை உணவில் அடிக்கடி சேர்த்து வர, புற்றுநோய் தாக்காமல் தடுக்கலாம்.
4. குடைமிளகாய் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கலோரிகளை அதிக அளவில் எரிக்க உதவும். இப்படி கலோரிகள் அதிகமாக கரைந்தால், உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
5. குடைமிளகாய் வயிற்றில் உணவைச் செரிக்க உதவும் அமிலத்தின் அளவை அதிகரித்து, செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். ஆகவே செரிமான பிரச்சனை இருந்தால், இதனை உணவில் அடிக்கடி சேர்த்து வாருங்கள்.
6. தலைமுடி பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமானால், குடைமிளகாயை உட்கொண்டு வருவதோடு, அதன் சாற்றினைப் பயன்படுத்துவதும் நல்லது. இதனால் தலைமுடி உதிர்வது தடுக்கப்படுவதோடு, தலைமுடியின் அடர்த்தியும் பராமரிக்கப்படும். ஆனால் இது எரிச்சலை ஏற்படுத்தும் தன்மை கொண்டதால், இதனைப் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
7. குடைமிளகாயில் உள்ள கேயீன் என்னும் வேதிப்பொருள், பலவிதமான உடம்பு வலிகளைக் குறைக்கிறது.

காளானை கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

காளானை கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

காளான் ரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.
இதனால் உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.
100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.

மருத்துவ பயன்கள்
காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள், ரத்தத்தில் கலந்துள்ள டிரைகிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.
இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை, எந்தவித பாதிப்பும் இல்லாமல் ரத்தத்திலிருந்து வெளியேற்றி, பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது.
இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுத்தப்படுகிறது.
இதனால் ரத்தம் சுத்தமடைவதுடன், இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.
ரத்த அழுத்தம் ஏற்படும்போது, உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். ரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால், சமநிலை மாறி உட்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது.
இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது. இதை சரிசெய்ய, பொட்டாசியம் சத்து நிறைந்த காளானை சாப்பிடுவது நல்லது.
காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.
காளான், மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.
தினமும் காளான் சூப் அருந்துவதால், பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக, காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.
100 கிராம் காளானில், 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு, சிறந்த ஊட்டச்சத்தாக அமைகிறது.
குறிப்பு: காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால், பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதை தவிர்ப்பது நல்லது.

Monday, February 1, 2016

தினமும் ஒரு கப் கேரட் ஜூஸ்! நன்மைகளோ ஏராளம்

தினமும் ஒரு கப் கேரட் ஜூஸ்! நன்மைகளோ ஏராளம்

கேரட் என்றதுமே நம் மனதில் முதலில் தோன்றுவது கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் என்பது தான்.
ஆம், கேரட் மிகச்சிறந்த ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறி.
கேரட்டை இரண்டு துண்டாக வெட்டி அதன் உள்பகுதியை உற்றுப்பார்த்தால், கிட்டத்தட்ட அது நம் கண்ணின் அமைப்பு போலவே இருக்கும்.
கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டாகேரட்டின் என்ற அமிலம் தான் தருகிறது. அந்த பீட்டாகேரட்டின் தான் மனிதக் கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது, வயோதிகம் காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டைக்கூட பீட்டாகேரட்டின் தடுத்து நிறுத்துகிறது.
கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்க உண்மை.
கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும், இதேபோன்று ஜூஸாகவும் செய்து குடிக்கலாம்.
* தற்போது கணினி முன்பு வேலைப் பார்ப்போரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி மொபைலை அதிக நேரம் உற்றுப் பார்ப்பதன் மூலமும் பார்வை கோளாறு விரைவில் ஏற்படும். எனவே இத்தகையவற்றை தவிர்க்க தினமும் கேரட் ஜூஸ் குடித்து வருவது நல்லது.
* கேரட்டில் உள்ள கரோட்டீனாய்டு என்னும் பொருள் இரத்த சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்க உதவும். எனவே தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், சர்க்கரை நோய் வருவதைத் தடுக்கலாம்.
* தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இதனை தினமும் குடிப்பதன் மூலம் தாய்ப்பாலின் அளவு அதிகரிப்பதோடு, கால்சியம் குறைபாடு தடுக்கப்பட்டு, குழந்தைக்கு வேண்டிய வைட்டமின் ஏ சத்து கிடைத்து, குழந்தையின் ஆரோக்கியமும் மேம்படும்.
* மேலும் வைட்டமின் ஏ குறைபாடு சரிசெய்யப்பட்டு சருமம் வறட்சி அடையாமல் பொலிவுடன் இருக்கும்.
* உணவு உண்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் குடித்தால், செரிமான அமிலத்தின் சுரப்பு சீராக தூண்டப்பட்டு, செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
* சுவாச பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படுவதோடு நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

Friday, January 29, 2016

கொத்தான கொத்தவரங்காயின் நன்மைகள்!

கொத்தான கொத்தவரங்காயின் நன்மைகள்!

சுவையான உணவான கொத்தவரையில் உடலுக்கு தேவையான ஆரோக்கிய சத்துக்கள் அடங்கியுள்ளன.
கொத்தவரையில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால் ரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்தினைக் குறைக்க உதவுகிறது.
மேலும், இதில் உள்ள மாவுச்சத்தும், புரதச்சத்தும் உடலுக்கு நல்ல எரிசக்தியைத் தந்து உடல் இயக்கத்துக்குத் துணை செய்கிறது.
கொத்தவரையில் விட்டமின் ‘ஏ’ சத்தும், விட்டமின் ‘சி’ சத்தும், விட்டமின் ‘கே’ மற்றும் “போலேட்ஸ்” ஆகியன அடங்கியுள்ளன.
இதில் விட்டமின் ‘சி’ சத்து மிகுதியாக உள்ளதால் பற்களையும் எலும்புகளையும் பலமுடையதாகச் செய்யத் துணை புரிகிறது.
இதில் அடங்கியுள்ள விட்டமின் ‘கே’ சத்து கர்ப்பிணிகளின் வயிற்றில் உதித்து வளர்ந்து வரும் கரு சீராகவும் வலுவாகவும் வளர வகை செய்கிறது.
கொத்தவரை மலச்சிக்கலைத் தீர்க்க உதவுகிறது. மேலும் பேதியை நிறுத்தவும், வயிற்றுப் போக்கைத் தடுக்கவும், உடல் பருமன் ஆகியவற்றைக் குறைக்க உதவி செய்கிறது.
ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைப்பதால் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைத் தடுத்து மாரடைப்பு வராத வண்ணம் தடுத்து உதவுகிறது.

இலைகள்
கொத்தவரையின் இலைகள் ஆஸ்துமா நோயைத் தணிக்க உதவுகிறது.
மேலும் கொத்தவரைச் செடி பசி அடக்கியாகவும், வலி நிவாரணியாகவும், நுண்கிருமி நாசினியாகவும், வீக்கம் கரைச்சியாகவும், வற்றச் செய்யும் குணமுடையதாகவும், வயிற்றுப் புழுக் கொல்லியாகவும், ஒவ்வாமைப் போக்கியாகவும், மூட்டு வலிக் குறைப்பானாகவும், கட்டிகளைக் கரைக்கவும் உதவுகிறது.

Thursday, January 28, 2016

சர்க்கரை நோயாளிகளுக்கான ஆரோக்கிய மருந்து “துளசி”

சர்க்கரை நோயாளிகளுக்கான ஆரோக்கிய மருந்து “துளசி”

அருமருந்தான துளசியை தினமும் உட்கொண்டு வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து வாழ்நாள் முழுவதும் விடுபடலாம்.
ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம், நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம்.
துளசிச் செடி அதிக அளவில் வளரும் இடங்களில் காற்றில் இருக்கும் புகை கிருமிகள் போன்ற மாசுகள் அழிந்து காற்று மண்டலம் தூய்மை அடையும்.
* துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு.
* அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும், மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும். இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது.
* அதுமட்டுமின்றி டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
* தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல், போன்றவற்றைப் போக்கும்.
* இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
* துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நாடாது.
* கோடை காலத்தில் வியர்வை நாற்றமும் கூடவே வந்துவிடும். அதனைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் மணக்கும்.
* துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படை சொரி இருந்த இடம் தெரியாமல் மறையும்.
* சர்க்கரை நோய் வந்தவர்களும் துளசி இலையை மென்று திண்ணலாம். இதனைச் செய்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்படும்.
* துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும்.
* வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும்.

Friday, January 22, 2016

உடல் நாற்றத்தை விரட்டும் நூல்கோல்!

உடலுக்கு சர்வ நிவாரணமளிக்கும் நூல்கோலை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
புற்றுநோயை விரட்டும்
நூல்கோலில் அதிக அளவில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுகளும், பைட்டோகெமிக்கல்களும் உள்ளன. இவையும், நூல்கோலில் உள்ள Glucosinolatesம் சேர்ந்து புற்றுநோய் ஆபத்துகளைத் தவிர்க்கின்றன.
தினமும், உணவில் சிறிதளவு நூல்கோல் சேர்த்துக் கொள்வதன் மூலம் மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்கள் வராமல் தப்பிக்கலாம்.
இதயம் காக்கும்
நூல்கோலில் உள்ள அதீத விட்டமின் கே சத்தானது இதயக் கோளாறுகள் வராமல் காக்கிறது. நூல்கோலின் கீரையானது, உடலில் உள்ள கொழுப்பைப் பயன்படுத்தி பித்தநீரை உறிஞ்சிக் கொள்ளக்கூடியது.
இதன் விளைவால் கொலஸ்ட்ரால் குறைகிறது. நூல்கோலில் உள்ள ஃபோலேட்டும் இதயத்துக்கு இதமானது.
எலும்புகளை பலப்படுத்தும்
நூல்கோலில் உள்ள கால்சியம் மற்றும் பொட்டாசியம் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவுகின்றன. அடிக்கடி உணவில் நூல்கோல் சேர்த்துக் கொள்பவர்களுக்கு மூட்டு வலி, ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படுகிற எலும்புகள் நைந்து போகிற பிரச்சனை, முடக்குவாதம் போன்றவை தவிர்க்கப்படும்.
நுரையீரலுக்கு பலம் தரும்
சிகரெட் பழக்கமுள்ளவர்களுக்கு சிகரெட்டில் உள்ள புற்றுநோய்க்குக் காரணமான கார்சினோஜென்கள், விட்டமின் ஏ பற்றாக்குறையை உருவாக்கும். அதன் விளைவாக நுரையீரல் வீக்கம் உள்ளிட்ட நுரையீரல் கோளாறுகள் உண்டாகும்.
நூல்கோலின் மேலுள்ள கீரைப்பகுதியில் விட்டமின் ஏ அதிகமாக உள்ளதால், அது நுரையீரல் ஆரோக்கியத்துக்குப் பெரிதும் உதவுவதாக சொல்லப்படுகிறது.
செரிமானத்தை சீராக்கும்
நார்ச்சத்து மிகுந்த காய் என்பதால் இயல்பிலேயே செரிமானத்தை சீராக்கும் குணம் இதற்கு உண்டு. தவிர, இதில் உள்ள Glucosinolates வயிற்றுஉபாதைகளுக்கும் வயிற்றுப்புண்ணுக்கும் காரணமான Helicobacter Pylori என்கிற பாக்டீரியாவை எதிர்க்கக்கூடியது.
ஆஸ்துமாவை குணப்படுத்தும்
நூல்கோலில் உள்ள விட்டமின் சி, பொதுவான நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுவதுடன், சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்டாக செயல்படுகிறது.
இது ஆஸ்துமா நோயையும், அதன் அறிகுறிகளையும் விரட்டக் கூடியது. மூச்சுத்திணறலால் அவதிப்படுகிற நோயாளிகளுக்கு நூல்கோல் நல்ல மருந்தாவதாக ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.
உடல் நாற்றம் விரட்டும்
கோடை காலங்களில் உடல்நாற்றம் தவிர்க்க முடியாதது. நூல்கோல் சாறு குடிப்பதன் மூலம் இந்த வாடையைத் தவிர்க்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்
நூல்கோலின் வேர்ப்பகுதிகளில் உள்ள பீட்டா கரோட்டின், ஆரோக்கியமான சவ்வுகள் உற்பத்தியாக உதவுவதுடன், நோய் எதிர்ப்புத் திறனையும் அதிகரிக்கக் கூடியது.