| நினைவாற்றலை அதிகரிக்கும் மாதுளை |
மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன.
* மாதுளம்பழச் சாறுடன் இஞ்சிச் சாறை சம அளவு எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால், நாள்பட்ட வறட்டு இருமல் ஓடிவிடும்.
* கல்கண்டு, பன்னீர், தேன், மாதுளம்பழச்சாறு நான்கையும் தலா ஒரு டம்ளர் எடுத்து, காய்ச்ச வேண்டும். இதை நெல்லிக்காய் அளவு எடுத்து, இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் படை, தேமல் போன்ற சரும நோய்கள் மறைந்து, சருமத்தை விட்டே விலகும்.
* மாதுளம்பழச் சாறையும் அருகம்புல் சாறையும் சம அளவு கலந்து குடித்து வந்தால், சூட்டினால் மூக்கிலிருந்து ரத்தம் வடிவது நிற்கும். இது உடலுக்குக் குளிர்ச்சியையும் தரும்.
* மாதுளை ஜுஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சினை நீங்கும். நினைவாற்றல் பெருகும். இது மட்டுமல்ல ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
![]() |
Monday, May 25, 2015
நினைவாற்றலை அதிகரிக்கும் மாதுளை
Friday, May 22, 2015
பப்பாளி
| அலர்ஜியால் அவதியா? இந்த பழத்தை சாப்பிடுங்க |
கண்ணை கவரும் நிறத்தில் இருக்கும் பப்பாயா உடலுக்கு ஆரோக்கியமான நன்மைகளை வழங்குகிறது.
பப்பாளியில் அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ,சி மற்றும் ஈ இருக்கிறது.
இத்தகைய அதிகமான அளவு ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், அவை உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை கரைக்கின்றன.
பப்பாளியை சாப்பிட்டால் மலச்சிக்கல் இருந்தாலும் சரியாகிவிடும். பப்பாளியில் இருக்கும் நொதிப்பொருள் மற்றும் நார்ச்சத்துக்கள், குடல் இயக்கத்தை சரியாக இயக்குவதால் செரிமானம் எளிதில் நடைபெற்று மலச்சிக்கலும் குணமாகிறது.
பப்பாளியில் உடலில் ஏற்படும் அலர்ஜியை எதிர்த்து போராடும் பண்புகள் இருக்கின்றன. அதனால் தான் உடலில் எரிச்சல் அல்லது புண் இருந்தால் பப்பாளியை சாப்பிடுகின்றனர்.
மேலும் மூட்டுவலி அல்லது ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பப்பாளி ஒரு சிறந்த மருந்தாகும்.
பப்பாளியில் இருக்கும் பலவித பண்புகளோடு புற்றுநோயை குணப்படுத்தும் பொருளும் இருக்கிறது.
இந்த பழத்தில் இருக்கும் நார்ச்சத்து, புற்றுநோய் உண்டாக்கும் டாக்ஸின்களை(Toxin) உடலில் இருந்து முற்றிலும் வெளியேற்றி, வயிற்றில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கிறது.
மேலும், பப்பாளியில் இருக்கும் போலேட், வைட்டமின் சி, பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவையும் புற்றுநோய் உண்டாக்குவதை தடுக்கும் சத்துக்களாகும்.
![]()
பப்பாளி ஜீஸ்
பழுத்த பப்பாளி பழம் – 1, பால் - 1 கப், சீனி - 1 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி எல்லாவற்றையும் ஒன்றாக மிக்சியில் போட்டு அரைக்கவும்.
வெனிலா ஐஸ் க்ரிம் அல்லது ஸ்ட்ராபெர்ரி ஐஸ் க்ரீம் சேர்த்துக் கொள்ளலாம்.
![]()
பயன்கள்
வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் அடங்கியுள்ளதால் உடலுக்கு ஆரோக்கியத்தையும், உற்சாகத்தையும் வழங்குகிறது.
இதில் நியுட்ரியஸ் உள்ளதால் உடம்புக்கு நல்லது.
கொலஸ்ட்ரால் குறையும்.
அழகாக மாற ஆசையா
பழுத்த பப்பாளியை மிக்ஸியில் அரைத்து எலுமிச்சை பழ ஜீஸ் விட்டு கலந்து முகம் மற்றும் உடலில் தடவி ஊறியபின் தேய்த்துக் குளித்தால் பருக்கள், கரும்புள்ளிகள் மறையும்.
பப்பாளி தோலினை அரைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து கொண்டால் சருமம் மற்றும் முக சுருக்கத்திற்கு குட்பை சொல்லிவிடலாம். அவை வராமலும் தடுக்கவும் செய்யும்.
உங்களுடைய தோலை மென்மையாக வைத்திருக்க விரும்பினால், பப்பாளிப் பழத்தை எடுத்து மெல்லிய படலமாக உங்களுடைய தோலில் தடவி, சில நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் கழுவிக் கொள்ளுங்கள். ![]() |
Tuesday, May 19, 2015
பாசிப்பயறு
புரதம், கார்போஹைட்ரேட்டுடன், இரும்புச்சத்து, நார்ச்சத்து, தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.
கர்ப்ப காலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயறைக் கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும்.
சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்குச் சென்று சேரும்.
குழந்தைகளுக்கும், வளரும் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பயறு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
வயிற்றுக் கோளாறு இருப்பவர்கள் பாசிப்பயறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.
சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயறு ஊற வைத்த தண்ணீரை அருந்தக் கொடுக்கலாம்.
அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப் பயறு சிறந்த மருந்துப் பொருளாக விளங்குகிறது.
மணத்தக்காளி கீரையோடு பாசிப்பயறையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.
பாசிப்பயறை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும்.
வல்லாரைக் கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குளிக்கும்போது சோப்புக்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக் குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.
|
| எந்த நோய்க்கு என்ன சாப்பிடலாம்? சூப்பர் டிப்ஸ் |
மருந்துகள் சாப்பிட்டாலும், சில காய்கறிகளும், பழங்களும் நமக்கு மருந்தாக பயன்பட்டு சில நோய்களை விரட்டியடிக்கின்றன.
இதோ, நோய்களுக்கு சாப்பிட வேண்டிய உணவுகள்:
ரத்த சோகை: கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் மற்றும் தக்காளி.
ஆஸ்துமா: தேன், கேரட், அன்னாசிப்பழம்.
சர்க்கரை நோய்: முளைவிட்ட சிறுதானியங்கள் - பீன்ஸ், பாகற்காய், வெள்ளரி.
வயிற்றுப் புண்: கேரட் மற்றும் பூசணி சாப்பிடலாம்.
இதய நோய்: ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசிப்பழம், மாதுழம்பழம்.
கொழுப்பு குறைய; கொள்ளு மற்றும் கேரட் நிறைய சாப்பிடலாம்.
சளித் தொல்லை: துளசி இலைச்சாறு, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சைச்சாறு சாப்பிடலாம்.
இரத்த வாந்தி: வெங்காயத்தை உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும்.
மலச்சிக்கல்: நாள் தோறும் ஒரு பப்பாளித் துண்டு சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும்.
|
Monday, May 11, 2015
உடலில் உள்ள கழிவுகளை விரட்டும் உணவுகள்
| உடலில் உள்ள கழிவுகளை விரட்டும் உணவுகள் |
உடலில் சேரும் கழிவுகளை(நச்சுக்களை) வெளியேற்ற உணவில் இனிப்பை அதிகம் சேர்க்காமல் இருந்தாலே போதுமானது ஆகும்.
அவ்வாறு உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் உணவுகள்,
இஞ்சி
மருத்துவ குணமிக்க இஞ்சியைக் குடிக்கும் டீயில் சிறிது தட்டிப் போட்டு குடித்து வந்தால், அதில் உள்ள பொருள், உடலை சுத்தமாக்கும்.
முக்கியமாக இஞ்சியை சுடுநீரில் போட்டு காய்ச்சி, தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், கல்லீரலில் கழிவுகள் சேராமல் இருக்கும்.
![]()
பூண்டு
பூண்டு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை முற்றிலும் வெளியேற்றும்.
எனவே தினமும் உணவில் பூண்டு சேர்த்து வாருங்கள். மேலும் ஒரு பச்சை பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கொழுப்புகளும் கரையும்.
![]()
நட்ஸ் மற்றும் பருப்பு வகைகள்
நட்ஸ், பருப்பு வகைகள் போன்றவற்றில் நார்ச்சத்து வளமையாக நிறைந்துள்ளது. எனவே இந்த உணவுப் பொருட்களை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் கழிவுகள் சேராமல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் செயல்படும்.
![]()
க்ரீன் டீ
உடலை சுத்தப்படுத்த உதவும் உணவுப் பொருட்களில் க்ரீன் டீ தான் முதன்மையானது. ஏனெனில் க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்(antioxidant)அதிகம் உள்ளது.
இதனால் மூளையின் செயல்பாடு அதிகரிப்பது, கொழுப்புகள் கரைந்து உடல் குறைவது மற்றும் டைப்-2 நீரிழிவின் தாக்கமும் குறையும்.
![]()
இளநீர்
இளநீரில் கலோரிகள் மற்றும் சோடியம் குறைவாகவும், கொலஸ்ட்ரால் இல்லாமல் இருப்பதால், இதனை குடித்தால், உடல் சுத்தமாவதோடு, சருமமும் பொலிவு பெறும்.
மேலும் இளநீர் குடித்து வந்தால், செரிமானம் சீராக நடைபெறும்.
![]() |
நோய்களை குணமாக்கும் தண்ணீர்: சூப்பர் டிப்ஸ்
| நோய்களை குணமாக்கும் தண்ணீர்: சூப்பர் டிப்ஸ் |
ஆனால், பணம் செலவழிக்காமல் நமக்கு ஆரோக்கியமான வாழ்க்கை தருவது தான் தண்ணீர்.
மனிதனின் உடல் உழைப்புக்கு ஏற்றவாறு நீர்ப்போக்கு ஏற்படுகிறது, ஒரு நாளைக்கு ஆண்கள் 3 லிட்டர் தண்ணீரும், பெண்கள் 2.2 லிட்டர் தண்ணீரும் அருந்த வேண்டும்.
தினமும், உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை எடுத்துக்கொள்வதன் மூலம், நம்மை எந்த நோய்களும் நெருங்கவிடாமல் தடுக்கலாம்.
1. காலையில் எழுந்ததும் பல் துலக்கும் முன்பே 160மிலி (4 டம்ளர்) தண்ணீர் அருந்துங்கள்.
2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிடங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.
3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.
4. காலை உணவுக்கு பின் 15 நிமிடங்களுக்கும், மதியம் மற்றும் இரவு உணவிற்கு பின் 2 மணி நேரங்களுக்கும் எதுவும் உட்கொள்ள வேண்டாம்.
5. முதியோர், நோயாளிகளால் ஆரம்பத்திலேயே 4 டம்ளர் நீரை அருந்த முடியாவிட்டால், கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.
எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும்:
*உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்.
*வாய்வுக்கோளாறுகள் - 10 நாட்கள்.
*சர்க்கரை வியாதி - 30 நாட்கள்.
*புற்றுநோய் - 180 நாட்கள்.
*காசநோய் - 90 நாட்கள்.
இதனை பின்பற்றி வாழ்ந்தால் நோய்கள் குணமாகும்.
![]() |
Monday, May 4, 2015
பாலக்கீரை
| மூளை வளர்ச்சியை அளிக்கும் கீரை |
அனைத்துவகை கீரைகளிலும் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது, அதில் ஒன்றான பசலைக்கீரை மூளைவளர்ச்சிக்கு உதவுகிறது.
மருத்துவ பயன்கள்
பாலக்கீரை போல் உடலுக்கு நன்மை தரும் கீரை வேறெதுவும் இல்லை. இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் போன்றவை இதில் அடங்கியுள்ளன.
இந்த கீரையில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைவை தடுக்கிறது. மலச் சிக்கலை போக்கிறது.
இதில் மிக அதிகமாக உள்ள பச்சையம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது.
ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது.
ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது.
இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது, ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது.
பாலக்கீரை இலைச் சாற்றுடன், சீரகம் 5 கிராம்,பூண்டு இரண்டு பல் ஆகியவற்றை அரைத்து மூன்று சம பாகமாகப் பிரித்து வடிகட்டி மூன்று வேளை சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும்.
![]() |
Subscribe to:
Comments (Atom)










