| வலுவான எலும்புகளுக்கு! உங்களுக்கான சூப்பர் மருந்து |
தானியங்களில் உடலுக்கு ஊட்டச்சத்து அளிப்பதில் மிகவும் உதவுவது கேழ்வரகு. இது ஆரோக்கியத்தை பராமரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
![]()
ஸ்லிம்மா இருக்கலாம்
கேழ்வரகில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோஅமிலம் பசி உணர்வை குறைக்கிறது, எனவே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.
மேலும் கேழ்வரகு மெதுவாக செரிமானமாவதால், அதிக கலோரிகள் உட்கொள்ளுவதை தடுக்கலாம்.
இதில் உள்ள நார்ச்சத்து, உணவு சாப்பிடும் போது ஒரு திருப்தி உணர்வை அளிப்பதால் உணவு அதிகம் உட்கொள்ளுவதை தடுக்க முடியும்.
![]()
வலுவான எலும்புகளுக்கு
கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும்.
மேலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாவதற்கான கால்சியம், இயற்கையாகவே கேழ்வரகில் உள்ளது.
![]()
நீரிழிவு நோயை குணப்படுத்த
கேழ்வரகில் உள்ள தாவரவகை ரசாயன கலவைகள் செரிமானத்தை குறைக்கின்றன.
இது நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
![]()
கல்லீரலில் கொழுப்பை குறைக்க
கேழ்வரகில் லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் இருப்பதால், கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
![]()
ரத்தசோகையை குணப்படுத்த
கேழ்வரகில் இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ளது. இதனால் இதனை அதிகம் உண்பது, ரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது.
![]()
சோர்வுக்கு டாட்டா
கேழ்வரகு உட்கொள்வது இயற்கையாகவே உடலை ஓய்வு பெற செய்யும்.
மேலும் இது கவலை, மனஅழுத்தம் மற்றும் தூக்கமின்மையை போக்குவது மட்டுமின்றி, ஒற்றை தலைவலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது.
![]() |
Sunday, December 28, 2014
வலுவான எலும்புகளுக்கு! உங்களுக்கான சூப்பர் மருந்து
Monday, December 22, 2014
கொள்ளு
| பொதுவாக தானிய வகைகளை நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்கிறேம்.
அவை நம் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் அதிக ஊட்டச்சத்தினை தருகின்றன.மேலும் நம்மை எப்போதும் புத்துணர்வுடன் வைக்க உதவுகின்றன.
அதுபோல் ஒன்று தான் கொள்ளு. தினமும் நாம் கொள்ளினை சாப்பிடுவதன் மூலம் நீண்ட ஆயுளும் பெறலாம். இதை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம்.
![]()
கொள்ளின் மகத்துவங்கள்
கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும்.
கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.
கொள்ளில் அதிகளவு அயர்ன் மற்ற பருப்புகளை விட அதிகமாக உள்ளதால், இதை சாப்பிடுவது மாதவிடாய் பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது.
கொள்ளுடன் சீரகமும் சேர்த்து ஊறவைத்து அந்த நீரை வடித்து லேசாக காய்ச்சி குடிப்பது வயிற்றுக்கு மிகவும் நல்லது.
குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால், கொள்ளினை சூப் செய்து சாப்பிடுவதன் மூலம் சளி குணமடையும்.
உடலில் உள்ள ஊளை சதைகளை குறைக்க கொள்ளுப் பருப்பு மிகவும் உதவும்.
சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.
இதயத்தை பாதுகாப்பாய் வைப்பதில் கொள்ளு பெரும் பங்கு வகிக்கின்றது.
![]() |
Tuesday, December 16, 2014
நெல்லிக்காய்
உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதில் வைட்டமின் சி அதிகம் உள்ள நெல்லிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஃபில்லாந்தேசியே என்ற தாவர குடும்பத்தை சேர்ந்த நெல்லிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வது மூலம் மூளை செயல்திறன் அதிகரிக்கிறது.
குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடும் நெல்லிக்காய் உடலில் தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றை பற்றி பார்க்கலாம்.
இதயத்தை காக்கும்
நெல்லிக்காய் இதயத்திற்கும் பலவிதமான பலன்களை அளிக்கிறது. கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, அதன் விளைவாக இதயத்தைப் பாதுகாக்கிறது. இருதயத்திற்குள் இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
வாய் துர்நாற்றம் விலகும்
நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாய் துர்நாற்றம் உள்ளிட்ட பல பிரச்சனைகளும் விலகி ஓடும். மேலும், பற்களை வலுவாக்கும், ஈறுகளில் ஏற்படும் தொற்றுக்களையும் ஆற்றுகிறது.
மலச்சிக்கல் தீரும்
நாம் சாப்பிடும் உணவுகளை எளிதாகச் செரிமானம் செய்து, மலச்சிக்கலே இல்லாமல் செய்வதற்கு நெல்லிக்காய் மிகவும் உதவுகிறது. அதிலுள்ள நார்ச்சத்துக்கள் செரிமான பிரச்சனைக்கு தீர்வாக இருக்கின்றன.
கொழுப்பை கரைக்கும்
உடல் பருமன் நோயினால் அவதிப்படுபவர்கள் மிக அதிகம். நீரிழிவு மற்றும் இதய நோய்களையும் இந்த உடல் பருமன் ஏற்படுத்துகிறது. நெல்லிக்காயில் உள்ள அதிக அளவிலான புரதச்சத்துக்கள் நம் உடலிலுள்ள கொழுப்பைக் கரைத்து அகற்றுகிறது.
கண்ணுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்
கண் புரை என்னும் பார்வை நோயைத் தவிர்ப்பதில் நெல்லிக்காய் பெரிதும் உதவுகிறது. மேலும், கண் சிவப்பாதல், கண்களில் நீர் வடிதல், கண் எரிச்சல், மாலைக் கண் உள்ளிட்ட பலவிதமான பிரச்சனைகளைப் போக்குவதற்கும் நெல்லிக்காய் உதவுகிறது.
விந்தணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்
ஆண்களில் சிலருக்கு விந்தணுக்கள் குறைவாக இருக்கும். அவர்கள் தொடர்ந்து நெல்லிக்காயைச் சாப்பிட்டு வந்தால் விந்தணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும்.
மாதவிடாய் வலி குறையும்
மாதவிடாய் நாட்களில் பெண்கள் வலியால் கடும் அவதிக்குள்ளாவர். நெல்லிக்காயை எடுத்துக் கொள்வதால், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகள் குறையும்.
தலைமுடியை வலுவாக்கும்
தலைமுடியை வலுவாக்குவதில் கால்சியத்தின் பங்கு அதிகம் உள்ளது. இந்தக் கால்சியம் நம் உடலுக்குள் எளிதாக ஊடுருவுவதற்கு நெல்லிக்காய் உதவுகிறது. நாம் உபயோகப்படுத்தும் ஷாம்புக்களில் நெல்லிக்காய் கலந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், உடலில் கால்சியம் சேரச் சேர எலும்புகளின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

Wednesday, December 3, 2014
Benefits of neem water are:
1.Anti-Inflammatory Properties: Neem water is associated with admirable anti-inflammatory properties. It helps to avoid inflammation caused by temperature fluctuations that make the skin susceptible to inflammation.
2.Reduces Black Spots: Neem is known as a natural remedy to reduce black spots that occur on layers of the skin, especially facial skin. In fact, it is easily the best natural remedy to reduce black heads.
3.Cleans Digestive System: The benefits of consuming neem water isn’t just confined to the skin alone. Neem water helps to effectively clean the body’s digestive system. It helps to clean the intestines and kidneys as well.
4.Anti-Oxidant Properties: Neem water when consumed orally offers brilliant anti-oxidant properties. Similar to the earlier mentioned point, it helps to improve digestion by eliminating toxins from the body.
5.Anti-Ageing Properties: Neem has a rich composition of nutrients that act as a natural source of keeping pollutants and toxins at bay. It helps to keep the skin clean and free from accumulation of germs and toxins that age skin faster.
6.Anti-Acne Property: Owing to its brilliant herbal formula, neem is supremely effective in treating acne. Neem has stunning anti-bacterial properties that help to naturally treat acne. Its potency is enhanced when applied with milk or honey.
7.Makes Tissues Of Facial Skin Firmer: Neem makes the tissues much firmer and helps ion toning the skin. It works wonders in treating cracks and freckles that are common problems associated with the skin. Neem water is one of the best ways to get a seamless skin tone.
8.Works As A Natural Moisturizer: Neem works as a natural moisturizer owing to its composition. The highly effective nutrient-rich composition of neem helps in fighting dryness and cracks originating from dry skin.
These are the benefits of neem water.
Subscribe to:
Comments (Atom)








